சொந்தக் கட்டிடங்களில் இயங்கும் தேவாலயங்களுக்கு நிதி உதவி திட்டம் !
Chennai collector announced financial assistance to churches
சொந்த கட்டிடங்களில் இயங்கும் கிறிஸ்தவ தேவாலயங்களை பழுது பார்த்தல் மற்றும் சீரமைத்தல் பணிகளை மேற்கொள்ள தமிழக அரசின் நிதி உதவி வழங்கும் திட்டம்
தமிழகம் முழுவதும் சொந்த கட்டிடங்களில் இயங்கும் கிறிஸ்தவ தேவாலயங்களை பழுது பார்த்தல் மற்றும் சீரமைத்தல் பணிகளை மேற்கொள்ள அரசின் நிதி உதவி வழங்கும் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. சென்னை மாவட்ட ஆட்சியர் சு.அமிர்தஜோதி தமிழகத்தில் சொந்த கட்டிடங்களில் இயங்கும் கிறிஸ்தவ தேவாரங்களை பழுது பார்த்து சீரமைக்க நிதி கோரும் விண்ணப்பங்கள் வரவேற்பதாக அறிவித்துள்ளார்.
இத்திட்டத்திற்கான விண்ணப்ப படிவம் மற்றும் சான்றிதழ் பிற்படுத்தப்பட்டோர் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை இணையதளமான www.bcmbcmw.tn.gov.in இணையதளத்தில் வெளியாகி உள்ளது. அதை பதிவிறக்கம் செய்து விண்ணப்பிக்கும் பட்சத்தில் மாவட்ட ஆட்சியர் தலைமையிலான குழுவின் மூலம் பரிசீலித்து அரசாணையின் நெறிமுறைகள் அடிப்படையில் ஆய்வுக்கு உட்படுத்தப்படும்.
மேலும் கட்டிடத்தின் வரைபடம், திட்டம் மதிப்பீடு மற்றும் முன்மொழிவானது சிறுபான்மை நிலத்துறை இயக்குனரின் பரிந்துரைக்கு அனுப்பப்படும். விண்ணப்பம் தொடர்பான விவரங்களை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தின் கீழ் இயங்கும் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் சிறுபான்மையினர் நகர துணை அலுவலர் அணுகி பெற்று கொள்ளலாம்
English Summary
Chennai collector announced financial assistance to churches