வீடு புகுந்து சிறுமிக்கு பாலியல் கொடுமை., 5 பேர்கொண்ட ரவுடி கும்பல் அட்டூழியம்.!   - Seithipunal
Seithipunal


வீட்டில் தனியாக இருந்த ஏழாம் வகுப்பு மாணவி இடம்பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாக 5 பேர் கொண்ட ரவுடி கும்பலை போலீசார் கைது செய்து நடவடிக்கை எடுத்துள்ளனர்.

சென்னை அடுத்த செங்குன்றம் பகுதியை சேர்ந்த லாரி ஓட்டுனரின் மகளான 13 வயது சிறுமி ஒருவர், தாய் தந்தை சரியில்லாத காரணத்தினால், 15 வயது சகோதரரின் பராமரிப்பில் இருந்து வந்துள்ளார்.

மேலும் அந்த பகுதியில் உள்ள அரசு பள்ளியில் ஏழாம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்த நிலையில் தனது சகோதரரின் கூட்டாளியான சந்தோஷ் என்பவருக்கு அதே பகுதியை சேர்ந்த 5 பேர் கொண்ட ரவுடி கும்பலுடன் முன்விரோதம் இருந்துள்ளது.

இந்நிலையில், கடந்த பிப்ரவரி மாதம் மூன்றாம் தேதி இந்த மாணவி மட்டும் தனியாக இருந்த போது, மாணவியின் சகோதரரை தாக்க வந்த வந்த 5 பேர் கொண்ட கும்பல், மாணவி தனியாக இருப்பதை பயன்படுத்தி பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டு உள்ளனர்.

அம்பத்தூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில், பாதிக்கப்பட்ட அந்த சிறுமி தனக்கு நேர்ந்த கொடூரத்தை தெரிவித்துள்ளார். இதுகுறித்து வழக்கு பதிவு செய்த போலீசார், செங்குன்றம் பாலகணேசன் நகரை சேர்ந்த லட்சுமணன், அப்துல், பாபு, அக்பர், வியாசர்பாடி கவுதம் ஆகிய 5 பேரை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

chenkunram abuse case issue


கருத்துக் கணிப்பு

அதிமுக - தவெக கூட்டணி அமைய வாய்ப்பு இருக்கிறதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

அதிமுக - தவெக கூட்டணி அமைய வாய்ப்பு இருக்கிறதா?




Seithipunal
--> -->