மும்பையில் சமந்தா வாங்கிய புது வீடு..எல்லாம் மாறும் என நம்புகிறேன்.. இன்ஸ்டாவில் உருக்கமான பகிர்வு!
Samantha bought a new house in Mumbai I hope everything will change A heartfelt share on Instagram
இந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வெலாய்ந்த சமந்தா, தற்போது மும்பையில் புதிய வீடு வாங்கி அதில் குடி புகுந்துள்ளார். தனது புதிய ஆடம்பர வீட்டின் கிரகப்பிரவேச புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்திருப்பது ரசிகர்களை மகிழ்வித்துள்ளது. சமந்தா, "வாழ்க்கை இனிமையாக அமையும் என்று நம்புகிறேன். எப்போதும் புன்னகையுடன் இருப்பேன்" என கூறி தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்.
சமந்தா சமீபத்தில் விஜய்தேவரகொண்டாவுடன் “குஷி” படத்தில் நடித்திருந்தார். அது எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை. இதற்குப்பிறகு, அவர் சிட்டாடல் வெப் தொடர் மூலம் திரும்ப வந்தார். மேலும், அவர் Rakt Brahmand: The Bloody Kingdom எனும் புதிய வெப் தொடரில் நடிக்கவுள்ளார். இந்த தொடரை இயக்குனர்கள் ராஜ் மற்றும் டிகே இயக்குகின்றனர்.
சினிமா வட்டாரத்தில் சமந்தா இயக்குநர் ராஜ் நிடிமோர்வுடன் காதலித்து வருவதாக கிசுகிசு பேச்சுகள் பரவி வருகின்றன. இருவரும் பல இடங்களில் சேர்ந்து சுற்றுவதால், விரைவில் திருமணம் செய்வார்கள் எனவும் கூறப்படுகிறது.
மும்பையில் குடியேறிய சமந்தா, இன்ஸ்டாகிராமில் தனது மௌனமான தருணங்களில் தோன்றிய தெளிவு பற்றியும் பகிர்ந்துள்ளார். அவர் கூறியது:"எனக்கு ஏற்பட்ட அனுபவத்தை வெறும் வார்த்தையாக இல்லாமல், நிஜமாகவே வாழ விரும்புகிறேன். நான் நினைப்பது, சொல்வது, செய்வது, விரும்புவது அனைத்தும் என்னுடைய உயர்ந்த சுயத்தை மதிக்க வேண்டும். இப்போது அதை வெறும் சொல்லாக இல்லாமல், வாழ்க்கையாக வாழ விரும்புகிறேன்."
அத்துடன் சமந்தா, பூஜை செய்வது, உடற்பயிற்சி, செல்ல நாய்களுடன் விளையாடு போன்ற வீடியோ மற்றும் போட்டோக்களையும் பகிர்ந்துள்ளார்.
கடந்த அக்டோபர் 5 அன்று, இன்ஸ்டாகிராமில் ஒரு ரசிகர் “உங்கள் பார்வையை மாற்றியது என்ன?” என்று கேட்ட போது, சமந்தா பதிலளித்தார்:"உங்களுக்கு எது தொந்தரவாக இருக்கிறதோ, அதில் தான் உங்கள் நோக்கம் இருக்கும். அதனால் நான் எல்லா தொந்தரவுகளையும் என் வாழ்க்கையில் சேர்த்து பார்த்தால், அது பல வழிகளில் வாழ்க்கையை எளிதாக்கியது. உங்களுக்கும் இது உதவும், முயற்சி செய்து பாருங்கள்."
பள்ளியில் கற்ற கருணை, அன்பு, சிறந்த மனிதராக இருக்க கற்றுக்கொண்ட பாடங்கள் சமந்தாவுக்கு மிகவும் மதிப்புள்ளவை. அவர் கூறியது:"பள்ளியில் படித்த பாடங்கள் என்னிடம் நினைவில் இல்லை, ஆனால் குணங்கள் நிலைத்துள்ளன. அவை வாழ்க்கையில் மிகவும் முக்கியமானவை."
English Summary
Samantha bought a new house in Mumbai I hope everything will change A heartfelt share on Instagram