செங்கல்பட்டு தனியார் பள்ளி பணி பெண்ணுக்கு பாலியல் தொல்லை: தாளாளர் மாற்றம், பெண் ஊழியர் பணிநீக்கம்! - Seithipunal
Seithipunal


செங்கல்பட்டு வேதாச்சலம் நகரில் உள்ள தனியார் பள்ளியில், பெண் அலுவலக ஊழியரிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாகக் கூறப்படும் தாளாளர் பணியிட மாற்றம் செய்யப்பட்டார்.

சேலத்தை தலைமையிடமாக கொண்ட பள்ளி அமைப்பின் கீழ் இயங்கும் இப்பள்ளியில் 1,000-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள், 30 ஆசிரியர்கள் மற்றும் 10 அலுவலக ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர்.

கடந்த 30-ஆம் தேதி, சேர்க்கை பணிகள் நடந்து கொண்டிருந்தபோது, இளம் பெண் ஊழியரிடம் அத்துமீறி நடந்ததாக புகார் எழுந்தது. அவர் பெற்றோரிடம் இது குறித்து தெரிவித்ததும், புகார் அளிக்க முயற்சி செய்யப்பட்டது.

ஆனால், சில முக்கிய பிரமுகர்கள் தாளாளருக்கு ஆதரவாக ஈடுபட்டு பெண்ணின் குடும்பத்தரை அழுத்தம் கொடுத்து சமாளித்ததாக கூறப்படுகிறது.

பின்னர், அரசியல் தலையீடு காரணமாக தாளாளர் பணியிட மாற்றம் செய்யப்பட்டார். அதேவேளையில், புகார் அளித்த பெண் ஊழியருக்கு பணி நீக்கம் செய்யப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த சம்பவம் பள்ளி மாணவர்கள் மற்றும் பெற்றோரிடையே அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

பெற்றோர் பலர், பள்ளி நிர்வாகத்திடம் இது குறித்த கேள்விகளை எழுப்பிய நிலையில், "இது போன்ற சம்பவங்கள் இனி நடக்காது" என நிர்வாகம் உறுதி அளித்ததாக கூறப்படுகிறது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

chengalpattu school abuse case


கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?




Seithipunal
--> -->