காதலுக்கு எதிர்ப்பு.. பிளஸ்-2 மாணவி எடுத்த விபரீத முடிவு!
Opposition to love Plus 2 student takes a drastic decision
காதலுக்கு தந்தை எதிர்ப்பு தெரிவித்ததால் மனமுடைந்த இளம்பெண் கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் திருவண்ணாமலை அருகே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருவண்ணாமலையை அடுத்த மங்கலம் அருகே உள்ள ஆர்ப்பாக்கத்தை சேர்ந்த ஏழுமலை என்பவருடைய இளைய மகள் திருவண்ணாமலை ஆர்ப்பாக்கத்தில் உள்ள பாட்டி வீட்டில் தங்கி படித்து வந்தார்.
அந்த மாணவி பிளஸ்-2 முடித்த நிலையில் கல்லூரியில் முதலாமாண்டு சேர்வதற்காக விண்ணப்பித்து இருந்த அந்த இளம்பெண், வாலிபர் ஒருவரை காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. இந்தநிலையில் தனது மகளின் காதல் விஷயம் தந்தை ஏழுமலைக்கு தெரியவர நேற்று முன்தினம் ஏழுமலை, அவரிடம் சிறு வயதில் காதல் வேண்டாம், கல்லூரியில் சேர்த்து விடுகிறேன் ஒழுங்காக படி என்று கூறியுள்ளார்.
அப்போது இதனால் தந்தை-மகளுக்கு இடையே ஏற்பட்ட வாக்குவாதத்தில் ஆத்திரம் அடைந்த ஏழுமலை, அவரை அடித்ததாக கூறப்படுகிறது.இதனால் மனமுடைந்த இளம்பெண் காதலனுக்கு போன் செய்து வரவழைத்துள்ளார். ஆர்ப்பாக்கம் பகுதியில் உள்ள பஞ்சாயத்து கிணறு அருகில் வந்த வாலிபரிடம், நமது காதல் விஷயம் வீட்டில் தெரிந்து விட்டதால் நாம் திருமணம் செய்து கொள்ளலாம் என்று இளம்பெண் கூறியுள்ளார்.
ஆனால் இருவரும் பேசிக்கொண்டிருந்த நிலையில் திடீரென இளம்பென் தற்கொலை செய்து கொள்வதற்காக கிணற்றில் குதித்துள்ளார். அப்போது அவரை காப்பாற்ற அந்த வாலிபரும் கிணற்றில் குதித்தார். இந்தநிலையில்தான் மகளை தேடி அங்கு வந்த தந்தை ஏழுமலை 2 பேரும் கிணற்றில் குதிப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்து கிணற்றில் குதித்து 2 பேரையும் காப்பாற்ற முயன்றார். இதில் ஏழுமலை, வாலிபரை மட்டும் காப்பாற்றினார். அவரது மகள் கிணற்றில் குதித்த வேகத்தில் ஆழத்திற்கு சென்று பரிதாபமாக உயிரிழந்தார்.இந்த சம்பவம் அந்த பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
English Summary
Opposition to love Plus 2 student takes a drastic decision