வருவாய்துறையின் திடீர் அறிவிப்பு... வீதியில் இறங்கிய மக்கள்.. செங்கல்பட்டு அருகே பரபரப்பு.! - Seithipunal
Seithipunal


செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள மேலகோட்டையூர் காவல் நிலைய குடியிருப்பு அருகேயுள்ள ராஜீவ்காந்தி நகர் பகுதியில், கடந்த 50 வருடங்களுக்கும் மேலாக நூற்றுக்கணக்கான குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். 

இந்நிலையில், எந்தவித முன்னறிவிப்புமின்றி வருவாய்த்துறையினர் குடியிருப்புவாசிகள் அங்கிருந்து வெளியேறும்படி பெயர் பலகை வைத்து சென்றுள்ளனர். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்ட நிலையில், இந்த விஷயத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதி மக்கள் போராட்டத்தில் குதித்தனர்.

 

மேலும், ராஜீவ் காந்தி நகர் பகுதி மக்கள் வண்டலூர் - கேளம்பாக்கம் சாலையின் இருபுறமும் அமர்ந்து போராட்டம் செய்தனர். இந்த போராட்டத்தில் 200 க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து சம்பவம் குறித்து தகவல் அறிந்து, தாழம்பூர் காவல்துறையினர் விரைந்து மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். 

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Chengalpattu Rajiv Gandhi Nagar Peoples Protest


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->