24 அடி நிரம்பிய செம்பரம்பாக்கம் ஏரி...! - உபரி நீர் வெளியேற்றம் தொடங்கியது...!
Chembarambakkam lake full 24 feet Surplus water release begun
சென்னையின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்யும் முக்கிய நீர் ஆதாரங்களில் முதன்மையானதாக செம்பரம்பாக்கம் ஏரி விளங்கி வருகிறது.
குன்றத்தூர் அருகே அமைந்துள்ள இந்த ஏரியின் அதிகபட்ச உயரம் 24 அடியாகவும், முழுக் கொள்ளளவு 3,645 மில்லியன் கன அடியாகவும் உள்ளது.

இந்த நிலையில், ஏரிக்கரைகள் மற்றும் மதகுகளின் நிலைத்தன்மை, பாதுகாப்பு பலம் ஆகியவற்றை முழுமையாக ஆய்வு செய்யும் நோக்கில், ஏரியை அதன் முழுக் கொள்ளளவு வரை நிரப்ப அதிகாரிகள் முடிவு செய்தனர்.
அதன்படி, செம்பரம்பாக்கம் ஏரி வரலாற்றில் முதன்முறையாக முழு கொள்ளளவை எட்டியுள்ளது. ஏரியின் நீர்மட்டம் 24 அடியை தொட்டுள்ள நிலையில், 3,645 மில்லியன் கன அடி நீர் சேமிக்கப்பட்டுள்ளது.
ஏரி நிரம்பி வழிவதால், பாதுகாப்பு நடவடிக்கையாக வினாடிக்கு 250 கன அடி உபரி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.
English Summary
Chembarambakkam lake full 24 feet Surplus water release begun