எந்தவித சிரமமும் இன்றி மாணவர்களுக்கு சான்றிதழ்கள்..அதிகாரிகளுக்கு மாவட்ட ஆட்சியர் உத்தரவு!
Certificates to students without any difficulty Order from the district collector to the officials
மாணவ மாணவியருக்கும் எந்தவித சிரமமும் இன்றி சான்றிதழ்கள் விரைவாக வழங்கிட மாவட்ட ஆட்சியர் குலோத்துங்கன் அதிகாரிகளுக்கு உத்தரவு பிறப்பித்தார்கள்.
புதுவை அரசு வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை மற்றும் மாவட்ட நிர்வாகம் சார்பாக மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு மூன்று சனிக்கிழமைகளில் மேல் படிப்பிற்காக விண்ணப்பிக்கும் பள்ளி, கல்லூரி மாணவ மாணவிகளுக்கு எவ்வித சிரமமும் இன்றி அவர்கள் எளிதில் பெரும் வகையில் வருமான வரி மற்றும் குடியிருப்பு உள்ளிட்ட சான்றிதழ்கள் வழங்கும் பணியினை மாவட்ட ஆட்சியர் குலோத்துங்கன் உத்தரவிட்டதின் பேரில் கடந்த சனிக்கிழமை முதல் பல்லாயிரக்கணக்கான மாணவர்கள் சான்றிதழ்களை பெற்றனர்.
இந்தநிலையில் இரண்டாம் சனிக்கிழமையான இன்று அனைத்து வருவாய்த்துறை அலுவலகங்களிலும் பள்ளி, கல்லூரி மாணவ மாணவிகளுக்கு எவ்வித சிரமமும் இன்றி அவர்கள் எளிதில் பெரும் வகையில் வருமான வரி மற்றும் குடியிருப்பு உள்ளிட்ட சான்றிதழ்கள் வழங்கும் பணிநடைபெற்று வரும் நிலையில் மாவட்ட ஆட்சியர் குலோத்துங்கன் அவர்கள் இன்று வில்லியனூர், கரிக்கலாம்பாக்கம், குருவிநத்தம், பாகூர் உள்ளிட்ட பல்வேறு தாலுகா அலுவலகம் மற்றும் கிராம நிர்வாக அதிகாரி அலுவலகங்களை ஆய்வு மேற்கொண்டு நடைபெற்று வரும் பணிகள் குறித்து ஆய்வு மேற்கொண்டார்கள்.
மேலும் அந்தந்த பகுதிகளில் வட்டாட்சியர்கள் உள்ளிட்ட அரசு அதிகாரிகள் இன்று பணியில் உள்ளார்களா என்பது குறித்தும் ஆய்வு மேற்கொண்ட ஆட்சியர் அவர்கள் ஆய்வின் போது வரும் பொது மக்கள் அமர்வதற்கு இருக்கைகள் மற்றும் குடிநீர் வசதிகள் உள்ளிட்ட வசதிகள் செய்யப்பட்டுள்ளனவா என்பது குறித்தும் ஆய்வு மேற்கொண்டார்கள் மேலும் ஆட்சியர் அவர்கள் பொதுமக்களுக்கும் மாணவ மாணவியருக்கும் எந்தவித சிரமமும் இன்றி அவர்கள் பயன்பெறும் வகையில் விரைவாக சான்றிதழ்கள் வழங்கிட உத்தரவு பிறப்பித்தார்கள்.
English Summary
Certificates to students without any difficulty Order from the district collector to the officials