நெல்லை : செல்போன் திருடிவிட்டு தற்கொலைக்கு முயன்ற திருடன் - ஆம்புலன்சில் காத்திருந்த அதிர்ச்சி.!! - Seithipunal
Seithipunal


நெல்லை : செல்போன் திருடிவிட்டு தற்கொலைக்கு முயன்ற திருடன் - ஆம்புலன்சில் காத்திருந்த அதிர்ச்சி.!!

நெல்லை புதிய பேருந்து நிலையத்தில் நேற்று மாலை ஏராளமான பயணிகள் பேருந்திற்காக காத்திருந்தனர். அப்போது மர்ம நபர் ஒருவர் இந்தக் கூட்ட நெரிசலை தனக்கு சாதகமாகப் பயன்படுத்தி பயணி ஒருவரது செல்போனை பறித்துக்கொண்டு  தப்பித்து ஓடினார். 

இதையறிந்த அந்த பயணி சத்தம் போடவே, அங்கிருந்த பயணிகள் அந்தத் திருடனைப் பிடித்து தர்ம அடி கொடுத்துள்ளனர். அதன் பின்னர் அங்கிருந்த பயணிகள் சம்பவம் குறித்து போலீஸாருக்குத் தகவல் தெரிவித்தனர். அந்த தகவலின் படி போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து திருடனை பிடித்தனர். 

உடனே அவர் தான் மறைத்து வைத்திருந்த பிளேடால் தன் கையைக் கிழித்துத் தற்கொலைக்கு முயன்றுள்ளார். இதையடுத்து போலீசார் திருடனை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்வதற்காக ஆம்புலன்ஸ் வரவழைத்து அதில் திருடனை ஏற்றிக் கொண்டு சென்றனர். 

அப்போது திருடன் திடீரென ஆம்புலன்ஸ் கதவைத் திறந்து வெளியே குதித்து தப்பித்துச் சென்று விட்டார். இதைத் தொடர்ந்து போலீசார் அங்குள்ள சிசிடிவி கேமரா காட்சிகளின் அடிப்படையில் சோதனை செய்தனர். அதில், அவர் பழையபேட்டை பகுதியைச் சேர்ந்த நல்லதம்பி என்பது தெரியவந்தது.  அவர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து நல்லதம்பியைத் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

cell phone thief sucide attempt in nellai new bus stand


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->