மாமன்னர் பெரும்பிடுகு முத்தரையர் அவர்களின் சதய விழா! - Seithipunal
Seithipunal


போர்கள் பல வென்று, பொற்கால ஆட்சி தந்த நிகரில்லா மாமன்னர் பெரும்பிடுகு முத்தரையர் அவர்களின் சதய விழா!

தமிழ் மொழியைக் காப்பதிலும், தமிழின் சிறப்புகள் காலத்திற்கும் நிலைபெறச் செய்ததிலும் பெரும்பங்கு வகித்தவர். தமிழுக்கு மெய்க்கீர்த்தி கண்ட முதல் பேரரசர் பெரும்பிடுகு முத்தரையர் அவர்களே. போர்களில் தோல்வி காணாத மாவீரர். கொடைச்சிறப்பு மிக்கவர்.

 பெரும்பிடுகு முத்தரையர், முத்தரைய அரச குலத்தைச் சேர்ந்த தஞ்சாவூரை கி.பி. 705 முதல் 745 வரை ஆட்சி செய்த அரசர் ஆவார். இவர் மேலும் பேரரசர் பெரும்பிடுகு முத்தரையர், சுவரன் மாறன், குவாவன் மாறன் என்றும் அறியப்படுகிறார். இவர் தஞ்சாவூர், புதுக்கோட்டை, திருச்சி ஆகிய நிலப்பரப்பை ஆண்ட  மன்னராவார்.[3]நந்திவர்மனின் முடிசூட்டு விழாவில் இவர் கலந்து கொண்டார். 1996 ஆம் ஆண்டு தமிழக அரசின் சார்பில் அப்போதைய முதலமைச்சர் ஜெயலலிதாவால், திருச்சி நகரில் இவரது சிலை நிறுவப்பட்டது. பிறகு 2002 ஆம் ஆண்டிலிருந்து, இவரது பிறந்தநாள் விழாவாக கொண்டாடப்படுகிறது.

 இரண்டாம் பெரும்பிடுகு முத்தரையர் மே 23 ஆம் தேதி கி.பி.675 பிறந்தார். இவரது தந்தை மாறன் பரமேசுவரன் என்ற இளங்கோவதிராயர். 705 ஆம் ஆண்டில் தனது தந்தையின் பின் அரியணை ஏறினார். நந்திவர்ம பல்லவனுடன் சேர்ந்துகொண்டு பாண்டிய, சேர படைகளை எதிர்த்து 12 போர்களில் போரிட்டுள்ளார். நாலடியார் நூலில், இவரது மரபு வழி குறிப்பிடப்படுகிறது. இவர் தமிழ் புலவர்கள் பலரை ஆதரித்து தமிழ் வளர்ச்சிக்கு வித்திட்டவர். இவரைப் புகழ்ந்து பாச்சில் வேள் நம்பன், ஆசாரியர் அநிருத்தர், கோட்டாற்று இளம்பெருமானார், குவாவங் காஞ்சன் என்போர் வெண்பாக்கள் பாடியுள்ளனர். அவை செந்தலையில் உள்ள சிவன்கோயில் கல்வெட்டுகளில் காண்கின்றன.

போரில் எதிரிகளை வென்ற பன்னிரண்டு இடங்கள் கொடும்பாளுர், மணலூர், திங்களூர், காந்தலூர், அழுந்தியூர், காரை, மரங்கூர், புகழி, அண்ணல்வாயில், செம்பொன்மாரி, வெண்கோடல், கண்ணனூர் ஆகும்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Celebration of the great King Perumpidugu Mutharayar


கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?




Seithipunal
--> -->