மதுரையில் இஸ்ரேல் கொடியை பறக்க விட்ட 4 பேர் மீது வழக்கு பதிவு!! - Seithipunal
Seithipunal


இஸ்ரேல் மீது ஹமாஸ் அமைப்பு கடந்த அக்டோபர் ஏழாம் தேதி முதல் நடத்திய தாக்குதலுக்கு பிறகு போர் நீடித்து வரும் இந்த சூழலில் கடந்த அக்டோபர் 24ஆம் தேதி பாலஸ்தீனத்திற்கு ஆதரவாக கோவை மாவட்டத்தில் அனைத்திந்திய ஜமாத், இஸ்லாமிய அமைப்புகள், அரசியல் கட்சிகள் சார்பில் போராட்டம் நடைபெற்றதில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

இந்தப் போராட்டத்தில் கலந்து கொண்ட சிலர் உக்கடம் ஆற்று பாலத்தின் அருகிய கட்டப்பட்டு வரும் புதிய மேம்பாலத்தின் மீது ஏறி பாலஸ்தீனக் கொடியை பறக்க விட்டனர். இந்த விவகாரம் தொடர்பாக இஸ்லாமிய இண்ட் அமைப்பைச் சேர்ந்த சபீர் அலி, மனிதநேய மக்கள் கட்சியைச் சேர்ந்த அபுதாஹிர், ரபிக் ஆகிய 3 பேர் மீது உக்கடம் போலீசார் வழக்கு பதிவு செய்தனர்

இந்த விவகாரம் பெரும் சர்ச்சை கிளப்பிய நிலையில் இன்று மதுரை மாவட்டம் கோரிப்பாளையம் பகுதியில் உள்ள ஏவி மேம்பாலத்தில் பாஜக மற்றும் ஆர்.எஸ்.எஸ் அமைப்பை சேர்ந்த 4 இளைஞர்கள் பாரத் மாதா கி ஜே என முழக்கமிட்டதோடு இஸ்ரேல் மற்றும் இந்திய தேசியக் கொடி கொண்ட பேனரை பறக்கவிட்டனர். இந்த சம்பவம் குறித்து கோரிப்பாளையம் போலீசார் பாஜக மற்றும் ஆர்எஸ்எஸ் அமைப்பைச் சேர்ந்த 4 இளைஞர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளனர். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Case registered against 4 people for flying Israel flag in Madurai


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->