10 ரூபாய் சவாலுக்காக நடுரோட்டில் குளித்து 3500 ரூபாய் இழந்த இளைஞர் - ஈரோட்டில் பரிதாபம்.! - Seithipunal
Seithipunal


10 ரூபாய் சவாலுக்காக நடுரோட்டில் குளித்து 3500 ரூபாய் இழந்த இளைஞர் - ஈரோட்டில் பரிதாபம்.!

ஈரோடு மாவட்டத்தில் உள்ள பன்னீர்செல்வம் பூங்கா பகுதியில் நேற்று முன்தினம் வாகன ஓட்டிகள் பச்சை நிற சிக்னலுக்காக காத்திருந்தனர். அப்போது மீனாட்சி சுந்தரம் சாலையில் ஸ்கூட்டரில் வந்த இளைஞர் ஒருவர் சிக்னலில் நின்று கொண்டிருந்தார்.

அப்போது, அந்த இளைஞர் திடீரென பக்கத்தில் வைத்திருந்த தண்ணீரை எடுத்து உடல் மீது ஊற்றி குளிக்க ஆரம்பித்துள்ளார். இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த அக்கம் பக்கத்தினர் இதனை தங்களது செல்போனில் வீடியோ எடுத்துள்ளனர்.

இதுகுறித்து தகவலறிந்து வந்த போலீசார் அந்த இளைஞரை பிடித்து அவரிடம் சம்பவம் குறித்து விசாரணை நடத்தினர். அதில், அந்த இளைஞர் வெள்ளோட்டத்தைச் சேர்ந்த பார்த்திபன் என்பதும், இந்த இளைஞர் இன்ஸ்டாகிராமில் விடப்பட்ட சவாலுக்காக நடுரோட்டில் குளித்ததும் தெரியவந்துள்ளது.

இதையடுத்து போலீசார் பார்த்திபன் மீது மூன்று பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து, 3500 ரூபாய் அபராதம் விதித்துள்ளனர். இளைஞர் ஒருவர் இன்ஸ்டாகிராம் மூலம் பத்து ரூபாய்க்கு விடப்பட்ட சவாலுக்காக அபராதம் மூலம் 3500 ரூபாய் இழந்த சம்பவம் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

case file on youth for bath mid way in erode


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->