தனியார் பேருந்து ஓட்டுனர்னர்களுக்கு எச்சரிக்கை விடுத்த போலீசார்! - Seithipunal
Seithipunal


போக்குவரத்து விதியை மீறிய தனியார் பேருந்து ஓட்டுனர்னர்களுக்கு எச்சரிக்கை விடுத்த போலீசார்:

சிவகங்கை மாவட்டம்: தேவகோட்டை- திருப்பத்தூர் சாலையில் உள்ள ஒத்தக்கடை பகுதியில் இருந்து ராம்நகர் வரை மருத்துவமனைகள், பள்ளி, கல்லூரிகள், அரசு அலுவலகங்கள், நீதிமன்றங்கள் போன்றவை உள்ளன.

இதனால் இப்பகுதி முழுவதும் எப்போதும் பரபரப்பாக காணப்படுவதால், போலீசார் இங்கு ஏற்படும் போக்குவரத்து நெரிசலை குறைப்பதற்காக பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர். 

மேலும் நகர தலைமை காவலர் சரவணன், போக்குவரத்து சார்பு ஆய்வாளர் அகிலன் ஆகியோர் பேருந்து நிறுத்தங்களில் சில மாற்றங்களை செய்து, போக்குவரத்து விதிகளை மீறுபவர்களுக்கு அபராதம் விதித்து வருகின்றனர்.

இந்த சாலையில் தனியார் பேருந்துகள் அதிவேகமாக வருவதால், போக்குவரத்து விதிகளை மீறுவதாக அதிக புகார் எழுந்துள்ளது. 

இதனால் போக்குவரத்து சார்பு ஆய்வாளர் அகிலன், உள்ளிட்ட அதிகாரிகள் அந்த பகுதியில் சோதனை நடத்தியபோது போக்குவரத்து விதிகளை பின்பற்றாமல் இயக்கப்பட்ட தனியார் பேருந்துகளுக்கு அபராதம் விதித்து, ஓட்டுனர்கள் மற்றும் நடத்துனர்களை எச்சரித்து அனுப்பி வைத்தனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

bus drivers conductors warning


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->