சேலம்.! சொத்து பிரச்சனையில் சகோதரியை தாக்கிய சகோதரர்கள் கைது.! - Seithipunal
Seithipunal


சேலம் மாவட்டத்தில் சொத்துப் பிரச்சனையில் சகோதரியை தாக்கிய சகோதரர்களை போலீசார் கைது செய்துள்ளனர்.

சேலம் மாவட்டம் ஜலகண்டாபுரம் கிராமத்தை சேர்ந்தவர் விவசாயி சுப்பிரமணியன். இவருக்கு 2 மனைவிகள் உள்ளனர்.

மூத்த மனைவி தங்கமாளுக்கு 3 மகன்களும், இரண்டாவது மனைவி ராஜலட்சுமிக்கு 2 மகள்களும் உள்ளனர். இந்நிலையில் கடந்த வருடம் உடல்நலக்குறைவால் சுப்பிரமணியன் உயிரிழந்துள்ளார்.

இதைதொடர்ந்து சொத்துக்காக முதல் மனைவியின் மகன்களுக்கும், இரண்டாவது மனைவியின் மகளுக்கும் இடையே தகராறு ஏற்பட்டிருந்த நிலையில் தந்தைக்கு சாமி கும்பிடுவதற்காக வீட்டிற்கு வந்த சகோதரி ஹேமமாலினியை சகோதரர்கள் 3 பேரும் சேர்ந்து தாக்கி உள்ளனர்.

இதை தடுக்க வந்த தாயார் ராஜலட்சுமி மற்றும் தங்கை லாவண்யா ஆகியோரையும் தாக்கியுள்ளனர். இதையடுத்து ஹேமமாலினி கருப்பட்டி காவல்துறையிடம், இந்த சம்பவம் குறித்து புகார் செய்த நிலையில் சகோதரர்களை கைது செய்து போலீசார் சிறையில் அடைத்தனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Brothers arrested for assaulting sister over property issue in selam


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->