காதலிக்க மறுத்த பள்ளி மாணவியின் வீட்டில் பெட்ரோல் குண்டு வீசிய இளைஞர்.!
Boy petrol bomb attack in Madurai for don't Love accept
மதுரை மாவட்டத்தில் உள்ள மேல அனுப்பானடி பகுதியை சேர்ந்தவர் சரவணகுமார் (வயது 45). இவரது மகள் காமராஜர் சாலையில் உள்ள பள்ளி ஒன்றில் படித்து வந்துள்ளார். இந்த நிலையில் அதே பகுதியை சேர்ந்த மணிரத்தினம் என்ற வாலிபர் மாணவியை ஒருதலையாக காதலித்து வந்துள்ளார்.
இதனையடுத்து மாணவி தனது பெற்றோரிடம் காதலிக்க வற்புறுத்தி பின் தொடர்வதாக கூறியுள்ளார். இதனையடுத்து அவர் இளைஞர் மணிரத்தினத்தின் பெற்றோரிடம் கூறி கண்டித்துள்ளார்.
இதில் இரு குடும்பத்தினரிடைய மோதல் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து சரவணகுமார் தெப்பக்குளம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அதன் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் மணிரத்னத்தை கைது செய்துள்ளனர்.
அதன் பிறகு ஜாமீனில் வெளிவந்த பிறகும் மாணவியை பின் தொடர்ந்து காதலிக்க வற்புறுத்தி தொந்தரவு செய்துள்ளார். ஆனால் மனைவி தொடர்ச்சியாக மறுப்பு தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில் மணிரத்னம் தனது நண்பருடன் இருசக்கர வாகனத்தில் சென்று மாணவியின் வீட்டில் பெட்ரோல் குண்டை வீசிவிட்டு தப்பி சென்றுள்ளார். இதில் மாணவியின் வீட்டு சுற்றுச்சுவர் சேதம் அடைந்தது. அதிர்ஷ்டவசமாக யாருக்கும் எந்தவித காயம் ஏற்படவில்லை.
இதனையடுத்து போலீசார் மேற்கொண்ட விசாரணையில் இன்று காதலர் தினத்திற்கு தன்னுடன் வரவேண்டும் என்று மாணவியை மணிரத்னம் வற்புறுத்தியதாகவும், அதற்கு மாணவி மறுப்பு தெரிவித்ததால் அவரை மிரட்டுவதற்காக பெட்ரோல் குண்டு வீசியதாக தெரியவந்துள்ளது.
இது குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் தலைமறைவாக உள்ள மணிரத்தினம் மற்றும் அவரது நண்பர் ஆகிய இருவரையும் தேடி வருகின்றனர்.
English Summary
Boy petrol bomb attack in Madurai for don't Love accept