பாஜகாவினர் ஆபரேஷன் சிந்தூர் வெற்றி யாத்திரை!  - Seithipunal
Seithipunal


தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு அருகே ஆபரேஷன் சிந்தூரில் வெற்றி பெற்ற ராணுவ வீரர்களுக்கு நன்றி செலுத்தும் விதமாக பாரதிய ஜனதா கட்சியினர் வெற்றியாத்திரை நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு பாலக்கோடு நகரத் தலைவர் கணேசன் அவர்கள் தலைமை தாங்கினார்.

 இந்த நிகழ்ச்சியில் மாவட்ட பொதுச்செயலாளர் சங்கீதா மத்திய அரசின் நலத்திட்ட பிரிவின் மாவட்ட துணைத் தலைவர் சிவா மாநில செயற்குழு உறுப்பினர் குணா ஆகியோர் முன்னிலை வகித்தனர் இதில் சிறப்பு அழைப்பாளர்களாக மாவட்ட தலைவர் சரவணன் மாவட்ட முன்னாள் தலைவர் பாஸ்கர் ஆகியோர் கலந்து கொண்டு யாத்திரியை துவக்கி வைத்தனர் .இந்த வெற்றி யாத்திரையானது பாலக்கோடு தக்காளி மண்டியிலிருந்து கடைவீதி வழியாக பேருந்து நிலையத்தை அடைந்தது. இதில் பாரத பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையில் நடந்த ஆபரேஷன் சிந்தூரில் பங்கேற்ற ராணுவ வீரர்களுக்கு நன்றி செலுத்தும் விதமாக மூவர்ண கொடியேந்தி யாத்திரையில் சென்றனர் .மேலும் ஓய்வு பெற்ற ராணுவ வீரர்களுக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தனர்.

 இதில் மாநில செயற்குழு உறுப்பினர் சாமி கண்ணு இந்து முன்னணி மாவட்ட பொறுப்பாளர் ராஜி கோவிந்தராஜ் முன்னாள் மாவட்ட துணைத்தலைவர் முரளி தெய்வமணி முன்னாள் நகர தலைவர் ஆறுமுகம் மாவட்ட பொருளாளர் முனியப்பன் சரவணன் சின்னசாமி சசிகுமார் முன்னாள் மாநில பொதுச் செயலாளர் கணேசன் மீனவரணி மாவட்ட தலைவர் மாதையன் முன்னாள் மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஸ்ரீதேவி நகர பொதுச்செயலாளர் தண்டபாணி ஜெய்கணேஷ் செயலாளர்கள் பசுபதி மணிவண்ணன் முனியப்பன் சாமுவேல் உட்பட பாரதிய ஜனதா கட்சி நிர்வாகிகள் தொண்டர்கள் திரளாக கலந்து கொண்டனர்.

 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

BJP members Operation Sindoor Victory Yatra


கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?




Seithipunal
--> -->