ஏமாற்றத்தில் சுற்றுலாப் பயணிகள்! குற்றாலம் நீர்வீழ்ச்சியில் குளிக்க தடை...! - Seithipunal
Seithipunal


தென்காசி மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் தொடர்ந்து பெய்து வரும் மழையால் குற்றால அருவிகளில் தண்ணீர் வரத்து அதிகரித்து காணப்படுகிறது.

இந்த நிலையில் 2 தினங்களுக்கு பின்பு நேற்று காலை முதல் சுற்றுலா பயணிகளுக்கு குளிக்க அனுமதி வழங்கப்பட்ட நிலையில் நேற்று இரவு முழுவதும் குற்றாலம் மற்றும் அதனை ஒட்டியுள்ள பகுதிகள் முழுவதும் தொடர்ந்து மழை பெய்தது. இதனால் குற்றால அருவிகளுக்கு நீர் வரத்து அதிகரித்து வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

இதன் காரணமாக இன்று மெயின் அருவி, பழைய குற்றாலம், ஐந்தருவி, சிற்றருவி உள்ளிட்ட அருவிகளில் குளிப்பதற்கு காவலர்கள் தடை விதித்தனர். மேலும், புலி அருவியில் மட்டும் சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டது.

அதிலும் இன்று விடுமுறை தினம் என்பதால் குற்றால அருவிகளில் குளிப்பதற்காக ஆர்வமுடன் வந்த வெளியூர் சுற்றுலா பயணிகள் ஏமாற்றமடைந்தனர்.

இதைத் தொடர்ந்து விட்டுவிட்டு சாரல் மழை பெய்து வருவதால் அருவிகளுக்கு மேலும் தண்ணீர் வரத்து அதிகரிக்கக் கூடிய வாய்ப்புள்ளதால் சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பு கருதி குளிக்க தடை விதிக்கப்பட்டதாக தெரிவித்துள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Tourists disappointed Bathing banned at Courtallam Falls


கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?




Seithipunal
--> -->