அபாயம்! கர்நாடகாவில் கனமழையால் சிவப்பு எச்சரிக்கை...!
Danger Red alert due to heavy rain in Karnataka
கர்நாடகா மாநிலத்தில் தென்மேற்கு பருவமழை தீவிரம் காட்டி வருகிறது.அதிலும் குறிப்பாக கடலோர மாவட்டங்கள் மற்றும் மலை மாவட்டங்களில் கனமழை கொட்டி வருகிறது.

இதனால் மங்களூரு, மைசூரு உள்பட மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் மண் சரிவு மற்றும் நிலச்சரிவு ஏற்படும் அபாயம் நிலவுகிறது.இந்நிலையில் நேற்று இரவு மங்களூரு வாமஞ்சூர் அருகேயுள்ள கெத்திக்கல்லில் ஒரு குன்று சரிந்து விழுந்தது.
இதன் காரணமாக பாதுகாப்பு கருதி சாலையின் ஒரு பகுதியில் போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளது.இதில் இன்று தட்சிண கன்னடா, குடகு,சிவமோகா மற்றும் சிக்கமகளூரு உள்ளிட்ட கடலோர மாவட்டங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை அறிவிக்கப்பட்டுள்ளது.
இதே போல் பெல்காம், கடக், ஹாவேரி, தார்வாட், சாமராஜநகர், தாவனங்கரே, ஹாசன் மற்றும் மைசூரு, பாகல்கோட், கொப்பல், மண்டியா, மாவட்டங்களுக்கு ஆரஞ்சு மற்றும் மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.எனவே அங்குள்ள மக்கள் அச்சத்தில் உள்ளனர்.
English Summary
Danger Red alert due to heavy rain in Karnataka