காவல் நிலையம் முன்பு தீக்குளித்த பாஜக நிர்வாகி -  விருதுநகரில் பரபரப்பு.!! - Seithipunal
Seithipunal


காவல் நிலையம் முன்பு தீக்குளித்த பாஜக நிர்வாகி - விருதுநகரில்  பரபரப்பு.!!

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள சிவகாசி அருகே திருத்தங்கல் ஆலாவூரணி பகுதியைச் சேர்ந்தவர் சத்யராஜ் பாஜக கட்சியை சேர்ந்த இவர் விருதுநகர் மேற்கு மாவட்ட அரசு தொடர்பு பிரிவு செயலாளர் ஆக பொறுப்பில் உள்ளார்.

இவர் திருத்தங்கல் ஜவுளி கடை அதிபர் ஈஸ்வரன் என்பவரிடம் ஆமத்தூரில் உள்ள ஐந்து ஏக்கர் நிலத்தை கிரயம் செய்து தருவதாக கூறி 51 லட்சம் பணம் பெற்றுக் கொண்டுள்ளார்

ஆனால் அவர் கூறியது போல் நிலத்தை கிரயம் செய்து தராமல் வாங்கிய பணத்தை திரும்பி தராமலும் இருந்துள்ளார். இதன் மூலம் தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த ஈஸ்வரன் சம்பவம் தொடர்பாக திருத்தங்கல் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் படி போலீசார் சத்தியராஜை கடந்த மாதம் கைது செய்துள்ளனர்.

இந்த நிலையில் கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு ஜாமினில் வெளியே வந்த சத்யராஜ் நேற்று மாலை 6 மணி அளவில் பெட்ரோல் கேனுடன் திருத்தங்கள் காவல் நிலையத்திற்கு வந்து தன் மீது பெட்ரோலை ஊற்றி தீ வைத்துக் கொண்டார்

இதை அறிந்த போலீசார் விரைந்து வந்து தீயை அணைத்து சத்யராஜை உயிருடன் மீட்டனர். இதை எடுத்து போலீசார் சத்யராஜை சிகிச்சைக்காக சிவகாசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்

அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. பாஜக நிர்வாகி ஒருவர் காவல் நிலையத்தின் முன்பு பெட்ரோலை ஊற்றி தற்கொலைக்கு முயன்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

bjp excuetive sucide attempt front of police station in near sivakasi


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->