5-வது நாளாக தடை நீடிப்பு...! குற்றால அருவியில் ஆர்ப்பரிக்கும் தண்ணீர்...! - Seithipunal
Seithipunal


கேரள மாநிலத்தில் முன்கூட்டியே தென்மேற்கு பருவமழை தொடங்கிய நிலையில், தமிழகத்தில்  தென்காசி, நெல்லை உள்ளிட்ட மாவட்டங்களில் பரவலாக கனமழை கொட்டி வருகிறது.

இதில்  மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் பலத்த மழை பெய்ததால், தமிழக அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதன் காரணமாக, குற்றாலத்திலுள்ள அனைத்து அருவிகளிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு காணப்படுகிறது.

இதனால் தற்போது மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியிலும் மழை குறைந்ததால், அருவிகளில் நீர்வரத்து சீரானது. இருப்பினும், மெயின் அருவி, ஐந்தருவி, பழைய குற்றாலம் உள்ளிட்ட அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டியது.

மேலும், தென்காசியில் விட்டு விட்டு மழை பெய்து வருவதால் பொதுமக்களின் பாதுகாப்பு கருதி குற்றாலத்திலுள்ள அனைத்து அருவிகளிலும் 5-வது நாளாக தடை விதிக்கப்பட்டுள்ளது.

இதனால் சுற்றுலா பயணிகள் பாதுகாப்பாக வீடு திரும்புவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Ban extended 5th day Water gushing from Courtala Falls


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->