எது சரி என்று தெரிந்தவன் நான்! தவறாக பேசியிருந்தால் மன்னிப்பு கேட்பேன்...! -கமல்ஹாசன்
I know what is right If I have spoken wrongly I will apologize Kamal Haasan
நடிகர் கமல் ஹாசனின் 'THUG LIFE ' திரைப்படம் வருகிற ஜூன் 5ம் தேதி திரையில் வெளியாகிற நிலையில், அண்மையில் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. அதில் சிறப்பு விருந்தினராக கன்னட நடிகர் 'சிவராஜ் குமார்' பங்கேற்றார். இந்நிகழ்ச்சியில் பேசிய கமல்ஹாசன், ' தமிழிலிருந்து பிறந்தது தான் கன்னடம்' என்று தெரிவித்திருந்தார்.

இந்த பேச்சுக்கு கர்நாடகாவில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.மேலும், முதல்- மந்திரி சித்தராமையா உள்பட பல அரசியல் கட்சி தலைவர்கள் கமல்ஹாசனை விமர்சனம் செய்து வருகின்றனர். அதில் கமல் தனது பேச்சுக்கு மன்னிப்பு கேட்க வேண்டும் எனவும் வலியுறுத்தினர்.
ஆனால் கமல் HASAN, தன்னால் மன்னிப்பு கேட்க முடியாது என பதிலளித்தார். இதற்கிடையில், கமல் மன்னிப்பு கேட்கவில்லை என்றால் 'தக் லைப்' படம் கர்நாடகாவில் வெளியாகாது என்று கர்நாடகா திரைப்பட சம்மேளனத் தலைவர் நரசிம்மலு தெரிவித்தார்.
கமல்ஹாசன்:
இன்று முதலமைச்சர் மு.க. ஸ்டாலினை சந்தித்த பின் செய்தியாளர் சந்தித்த கமல்ஹாசன் இது குறித்து தெரிவிக்கையில்,"இது ஒரு ஜனநாயக நாடு. நான் சட்டம் மற்றும் நீதியை நம்புகிறேன்.
கர்நாடகா, ஆந்திரா மற்றும் கேரளா மீதான எனது அன்பு உண்மையானது. நான் தவறாக பேசி இருந்தால், மன்னிப்பு கேட்பேன், இல்லையென்றால் மாட்டேன்"எனத் தெரிவித்தார்.
English Summary
I know what is right If I have spoken wrongly I will apologize Kamal Haasan