பயங்கரவாத தாக்குதலில் உயிரிழந்தவரின், குடும்பத்தினரை நேரில் சந்தித்து, ஆறுதல் கூறிய பிரதமர் மோடி..!
Prime Minister Modi met the family of the deceased in the terrorist attack and offered condolences
கடந்த மாதம் 22-ஆம் தேதி ஜம்மு-காஷ்மீரின் அனந்த்நாக் மாவட்டம் பஹல்காமில் உள்ள சுற்றுலா தளத்தில் தேதி பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தியத்தில் சுற்றுலா பயணிகள் 26 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலுக்கு பாகிஸ்தானை தலைமையிடமாக கொண்ட லஷ்கர்-இ-தொய்பா பயங்கரவாத அமைப்பின் கிளை அமைப்பான தி ரெசிஸ்டண்ட் பிரண்ட் பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்றது.
இதற்கு பதிலடி தாக்குதலாக பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத நிலைகளை குறிவைத்து இந்தியா 'ஆபரேஷன் சிந்தூர்' நடவடிக்கையை மேற்கொண்டது. 03 நாட்கள் நடந்த மோதலில் ஏவுகணை, டிரோன்கள் மூலம் இரு தரப்பிலும் தாக்குதல்கள் நடத்தப்பட்டனதில், பலர் உயிரிழந்தோடு, சில இடங்கள் சேதமாகின. உயிரிழந்தனர். இதன் பின்னர் கடந்த 10-ஆம் தேதி இரு தரப்பினருக்கும் இடையில் போர் நிறுத்தத்திற்கு ஒப்புக்கொண்டன.

குறித்த பஹல்காம் தாக்குதலில் உத்தரபிரதேசத்தை சேர்ந்த சுபம் திவிதி என்பவரும் உயிரிழந்தார். கடந்த பிப்ரவரி மாதம் இஷ்னெயா என்ற பெண்ணுடன் இவருக்கு திருமணம் நடைபெற்றது. திருமணத்திற்குப் பின் இவர்கள் காஷ்மீருக்கு சுற்றுலா சென்ற நிலையில் பயங்கரவாத தாக்குதலில் சுபம் திவிதி உயிரிழந்தார்.
இந்நிலையில், உத்தர பிரதேசத்திற்கு சென்ற பிரதமர் மோடி கான்பூரில் திவிதியின் குடும்பத்தினரை சந்தித்துள்ளார். அங்கு அவர் சுபம் திவிதியின் குடும்பத்தினரை நேரில் சந்தித்த அவர், சுபம் திவிதியின் தந்தை, தாய், மனைவி ஆகியோருக்கு ஆறுதல் கூறியுள்ளார்.
English Summary
Prime Minister Modi met the family of the deceased in the terrorist attack and offered condolences