பொங்கல் பண்டிகை எதிரொலி - தமிழகத்தில் பலூன் திருவிழா..! - Seithipunal
Seithipunal


பல்வேறு நாடுகளில் பலூன் திருவிழா மிக பிரமாண்டமாக நடத்தப்படுகிறது. அந்த வகையில், இந்தியாவை பொறுத்தவரை ஆந்திராவின் அரக்கு வேலி மற்றும் தமிழகத்தில் பொள்ளாச்சியில் நடத்தப்படுகிறது.

அதிலும் பொள்ளாச்சி பலூன் திருவிழாவிற்கு சர்வதேச அங்கீகாரம் உண்டு. கடந்த 2015-ம் ஆண்டு முதல் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அங்கு சர்வதேச பலூன் திருவிழா நடத்தப்பட்டு வருகிறது. கடந்தாண்டு நடைபெற்ற பலூன் திருவிழாவில் 11 நாடுகள் பங்கு கொண்டன.

இந்த நிலையில், தமிழகத்தில் அடுத்த ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜனவரி மாதம் 10-ந்தேதி முதல் 19-ந்தேதி சென்னை, கோவை, பொள்ளாச்சி உள்ளிட்ட இடங்களில் பலூன் திருவிழா நடத்தப்பட உள்ளது. சென்னையில் எங்கு நடைபெறும் என்பது பரிசீலனை செய்யப்பட்டு வருகிறது.

ஒவ்வொரு பகுதியிலும் எப்போது பலூன் திருவிழா நடைபெறும் என்பதற்கான தேதியை தமிழக அரசு விரைவில் அதிகாரபூர்வமாக அறிவிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த பலூன் திருவிழாவிற்கான டீசர் https://youtu.be/Bu2p8YVN3gQ வெளியிடப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

balloon festival in tamilnadu


கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?




Seithipunal
--> -->