முதுமலையில் பரிதாபம்.! வளர்ப்பு யானை தாக்கி பாகன் உயிரிழப்பு..! - Seithipunal
Seithipunal


நீலகிரி மாவட்டம் முதுமலையில் வளர்ப்பு யானை தாக்கி பாகன் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

நீலகிரி மாவட்டத்தில் உள்ள முதுமலை புலிகள் காப்பகத்தில் தெப்பக்காடு மற்றும் அபயாரண்யம் பகுதிகளில் யானைகள் முகாம் உள்ளது. இங்கு ஒவ்வொரு யானைக்கும் பாகன் நியமிக்கப்பட்டு யானைகள் பராமரிக்கப்பட்டு வருகின்றன. இதில் தெப்பக்காடு முகாமில் மசினி என்ற யானையை பராமரித்து வந்த பாகன் பாலன் என்பவர், இன்று காலை வழக்கம்போல் யானைக்கு உணவளிக்க சென்றுள்ளார்.

அப்பொழுது திடீரென யானை பாலனை தாக்கியுள்ளது. இதையடுத்து பாலனை, உடன் பணிபுரிந்தவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர் ஆனால் பாலன் மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இதைத்தொடர்ந்து இந்த சம்பவம் குறித்த தகவல் அறிந்து வந்த போலீசார் இதுகுறித்து விசாரணையும் மேற்கொண்டு வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Bagan killed in Muthumalai farm elephant attack


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->