முறைத்து பார்த்த கொத்தனாரை கத்தியால் குத்திய ஆட்டோ ஓட்டுநர் - பரமக்குடியில் பரபரப்பு.! - Seithipunal
Seithipunal


முறைத்து பார்த்த கொத்தனாரை கத்தியால் குத்திய ஆட்டோ ஓட்டுநர் - பரமக்குடியில் பரபரப்பு.!

ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள பரமக்குடியை அடுத்து எமனேஸ்வரம் பகுதியைச் சேர்ந்தவர் கனகராஜ். கொத்தனாரான இவர், தனது நண்பர்களுடன் பேசிக்கொண்டு இருந்துள்ளார். அப்போது அங்கு வந்த குமாரக்குறிச்சி பகுதியைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் துரைமுருகன் கொத்தனார் கனகராஜை பார்த்து, ‘’என்னை பார்த்து ஏன் முறைக்கிறாய்’’ என்று வாக்குவாதம் செய்துள்ளார்.

சிறிது நேரத்தில் இந்த வாக்குவாதம் தகராறாக மாறியதால் துரைமுருகனை, கனகராஜும் அவரது நண்பர்களும் சேர்ந்து தாக்கியுள்ளனர். இதனால் துரைமுருகன் தனது நண்பர்களுக்கு போன் செய்து வரவழைத்துள்ளார். அதன் படி அவர்களும் வந்தனர்.

பின்னர் இருதரப்பினரும் மோதிக்கொண்ட நிலையில் துரைமுருகன் தன வைத்திருந்த கத்தியால் கனகராஜை சரமாரியாக குத்திவிட்டு அங்கிருந்து தப்பித்துச்  சென்றுள்ளார். இதனால் பலத்தக் காயமடைந்த கனகராஜை அங்கிருந்தவர்கள் மீட்டு மருத்துவமனைக்கு கொண்டுச் சென்றனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டும் கனகராஜ் பரிதாபமாக உயிரிழந்தார்.

இந்த நிலையில் பலியான கனகராஜுக்கு 7 மாத கைக்குழந்தை உள்ளதால் அவரது மனைவிக்கு அரசு வேலை வழங்க வேண்டும் என்றும் அரசு நிதியுதவி வழங்க வேண்டும் என்றும் கோரி அவரது உறவினர்கள் கனகராஜின் உடலை வாங்க மறுப்புத் தெரிவித்து மறியலில் ஈடுபட்டனர்.

இது குறித்து தகவலறிந்து வந்த போலீஸர் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தியதைத் தொடர்ந்து உறவினர்கள் மறியலை கைவிட்டு உடலை வாங்கி சென்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியதால் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

auto driver kill man in ramanathapuram


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->