சென்னை : வேளச்சேரியில் ஆட்டோ ஓட்டுநர் வெட்டி கொலை - விசாரணையில் வெளிவந்த பகீர் தகவல்.!! - Seithipunal
Seithipunal


வேளச்சேரியில் ஆட்டோ ஓட்டுநர் வெட்டி கொலை - விசாரணையில் வெளிவந்த பகீர் தகவல்.!!

சென்னையில் உள்ள வேளச்சேரி நேரு நகர் பகுதியைச் சேர்ந்தவர் தினேஷ். ஆட்டோ ஓட்டுநரான இவர் நேற்று முன்தினம் இரவு கிண்டி மடுவாங்கரை பகுதி வழியாக ஆட்டோவில் சென்று கொண்டிருந்தார்.

அப்போது அங்கு வந்த ஒரு கும்பல் தினேஷை அரிவாளால் வெட்ட முயன்றது. இதைப்பார்த்த தினேஷ், அங்கிருந்து தப்பி ஓடியுள்ளார். அவரைப் பின் தொடர்ந்து வந்த கும்பலில் 2 பேர் தினேஷை பிடித்து வெட்டிக் கொலை செய்தனர். இதைப்பார்த்த அப்பகுதி மக்கள் சம்பவம் குறித்து போலீஸாருக்குத் தகவல் தெரிவித்தனர்.

அதன் படி போலீசார் விரைந்து வந்து தினேஷ் உடலை மீட்டு ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அதன் பின்னர் கொலையாளிகள் இரண்டு பேரையும் கைது செய்து விசாரணை நடத்தினர்.

அந்த விசாரணையில், "ஆதம்பாக்கம் பகுதியின் ரவுடிகளான நாகூர் மீரான் மற்றும் ராபின்சன் கோஷ்டியினருக்கு இடையே ஏற்பட்ட தகராறில், நாகூர் மீரானை, ராபின்சன் கோஷ்டியினர் கொலை செய்தனர். 

இந்த கொலை வழக்கில் சம்பந்தப்பட்ட ராபின்சன், மணி வண்ணன், உதய் உள்ளிட்ட பலர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். இந்த நிலையில், நேற்று முன்தினம் ஜாமீனில் வெளிவந்த ராபின்சனின் கூட்டாளிகளான மணிவண்ணன் மற்றும் உதய், சிறையிலிருந்து வெளி வந்த சில மணி நேரங்களிலேயே தினேஷை தங்களது கூட்டாளிகளுடன் சேர்ந்து கொலை செய்தது தெரிய வந்தது.

இதனால், இருவரும் கைது செய்யப்பட்டு மீண்டும் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். மேலும், தினேஷை கொலை செய்வதற்கு துணையாக இருந்த காமேஷ், ஈஸ்வர், வசந்த், தினேஷ் உள்ளிட்ட நான்கு பேரையும் போலீஸார் நேற்று இரவு கைது செய்தனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

auto driver kill in chennai velachery


கருத்துக் கணிப்பு

இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமர் பதவி வகிப்பார் என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமர் பதவி வகிப்பார் என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->