பள்ளி மாணவியிடம் தவறாக நடக்க முயற்சி.! ஆட்டோ ஓட்டுநர் போக்சோவில் கைது..! - Seithipunal
Seithipunal


பெரம்பலூர் மாவட்டத்தில் பள்ளி மாணவியிடம் தவறாக நடக்க முயன்ற ஆட்டோ ஓட்டுநரை போலீசார் போக்சோவில் கைது செய்தனர்.

பெரம்பலூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் 15 வயதுடைய பத்தாம் வகுப்பு மாணவி. இவர் சம்பவத்தன்று பல் வலி காரணமாக மருத்துவமனைக்கு செல்வதற்கு பேருந்துக்காக காத்திருந்துள்ளார். அப்பொழுது அவ்வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த, வாடகைக்கு ஆட்டோ ஓட்டும் அரணாரை பகுதியை சேர்ந்த முருகன்(29) என்பவர், மாணவியை செல்ல வேண்டிய இடத்தில் இறக்கி விடுவதாகக் கூறி அழைத்து சென்றுள்ளார்.

ஆனால் முருகன் மருத்துவமனைக்கு செல்லாமல் மாணவியை அருகிலிருந்த காட்டுப்பகுதிக்கு அழைத்துச் சென்று மாணவியிடம் தவறாக நடக்க முயன்றுள்ளார். இதையடுத்து மாணவி அங்கிருந்து தப்பி வந்து இதுகுறித்து பெற்றோரிடம் கூறியுள்ளார். இதைக்கேட்டு அதிர்ச்சியடைந்த சிறுமியின் பெற்றோர் இது குறித்து பெரம்பலூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தனர். இந்த புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்த போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் முருகனை கைது செய்தனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Auto driver arrested for trying to molest school girl in Perambalur


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->