தமிழகத்தில் இந்த மாவட்டத்தில் ஆகஸ்ட் 1ம் தேதி உள்ளூர் விடுமுறை.. மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு.!
August 1 local holiday for chengalpattu district
செங்கல்பட்டு மாவட்டத்திற்கு வரும் ஆகஸ்ட் 1-ம் தேதி உள்ளூர் விடுமுறை என்று மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.
தமிழகத்தில் உள்ள ஒவ்வொரு மாவட்டங்களிலும் கோவில் திருவிழாக்கள், சிறப்பு பண்டிகை உள்ளிட்ட தினங்களை முன்னிட்டு உள்ளூர் விடுமுறை வழங்கப்பட்டு வருகிறது.
அந்த வகையில், செங்கல்பட்டு மாவட்டம் மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் சக்தி பீடத்தில் ஒவ்வொரு ஆண்டும் ஆடிப்பூர திருவிழா வெகு விமர்சையாக நடைபெறுவது வழக்கம் .அதன்படி, இந்த ஆண்டுக்கான திருவிழா ஆகஸ்ட் 1-ம் தேதி நடைபெற உள்ளது.

இதை முன்னிட்டு, செங்கல்பட்டு மாவட்டத்திற்கு ஆகஸ்ட் 1-ம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவித்து அம்மாவட்ட ஆட்சியர் ராகுல் நாத் உத்தரவிட்டுள்ளார்.
English Summary
August 1 local holiday for chengalpattu district