மணல் திருட்டை தடுத்த கிராம நிர்வாக அலுவலர் மீது தாக்குதல்.. காவல்துறை விசாரணை..!
Attack on a village administration officer
மணல் திருட்டை தடுத்த கிராம நிர்வாக ஆய்வாளரை தாக்கியவர்களை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.
சிவகங்கை மாவட்டம், பெரும்பச்சேரியில் உள்ள ஆற்று பகுதியில் மணல் திருட்டு நடைபெறுவதாக அந்த பகுதி மக்கள் கிராம நிர்வாக அலுவருக்கு தகவல் அளித்தனர். இந்த தகவலை அடுத்து விரைந்து வந்த கிராம நிர்வாக அலுவலர் மற்றும் காவல்துறையினர் மணல் கடத்தலில் ஈடுப்பட்ட டிராக்டரை பறிமுதல் செய்தனர்.
இதனால், கோபடைந்த மணல் கடத்தல் கும்பல் தனியாக வந்த கிராம நிர்வாக அலுவலரை சரமாறியாக தாக்கினர். இதில் படுகாயமடைந்த அவர் மருத்துவமனையில் அனுமதித்தனர். அவர் அளித்த புகாரின் அடிப்படையில் வழக்குபதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
English Summary
Attack on a village administration officer