மின்சாரத்தில் அலட்சியம் வேண்டாம்.. தென்னை ஓலைகளை வெட்ட சென்று பரிதாபமாக உயிரிழந்த வாலிபர்.!!
Ariyalur vikkiramangalam youngster died
அரியலூர் மாவட்டத்தில் உள்ள விக்கிரமங்கலம் அருகே இருக்கும் முத்துவாஞ்சேரி கிராமத்தில் உள்ள தெற்கு தெருவை சேர்ந்தவர் ராஜேந்திரன். இவரது மகன் ரகு பாலன் (வயது 30). இவர் எலக்ட்ரீசியனாக சென்னையில் இருக்கும் தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்துள்ளார்.
கொரோனா ஊரடங்கு காரணமாக தற்போது சொந்த ஊருக்கு வந்துள்ளார். இந்நிலையில், முத்துவாஞ்சேரி கொள்ளிடம் ஆற்றுப் பகுதிக்கு செல்லும் வழியில், அவரது நண்பர் ரமேஷுக்கு சொந்தமான விவசாய நிலத்தில் தென்னை மரத்தின் பட்டைகளை வெட்டுவதற்காக சென்றுள்ளார்.
அந்த வழியாக செல்லும் மின் இணைப்பு இல்லாத மின் கம்பிகளை கழற்றி விட்டு, பின்னர் தென்னை மரத்தை வெட்டுவதற்கு முடிவு செய்தனர். இதனால் கம்பத்தில் ஏறி ஒரு முனையில் இருக்கும் மின் கம்பிகளை அகற்ற முயன்றுள்ளார்.
அந்த சமயத்தில், எதிர்பாராத விதமாக மின்இணைப்பு இல்லாத கம்பிகளில் மின்சாரம் இணைக்கப்பட்டுள்ளது. இதனால் ரகுமான் கையில் பிடித்திருந்த மின் கம்பியில் மின்சாரம் பாய்ந்து அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியாகியுள்ளார்.
அவரது உடல் மின்கம்பத்தின் மின் கம்பிகள் மீது தொங்கியபடி இருந்துள்ளது. இந்த விஷயம் தொடர்பாக தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சோதனை செய்தனர். பின்னர் மின் இணைப்பைத் துண்டித்துவிட்டு, மின்கம்பியில் இருந்த பாலனின் உடலை மீட்டனர். இவரது உடல் பிரேத பரிசோதனைக்காக ஜெயங்கொண்டம் மருத்துமனைக்கு அனுப்பி வைக்கப்பட்ட நிலையில் இந்த விஷயம் தொடர்பாக காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Tamil online news Today News in Tamil
English Summary
Ariyalur vikkiramangalam youngster died