#அரியலூர் : 13 வயது சிறுமியை கர்ப்பமாக்கிய 57 வயது நபர்.. தப்பியோடி வந்து பெண்ணாடத்தில், திடீர் முடிவு.! - Seithipunal
Seithipunal


அரியலூர் மாவட்டம் வங்காரம் கிராமத்தைச் சேர்ந்த அன்பழகன் என்ற 57 வயது நபர் 13 வயது சிறுமி ஒருவரை பாலியல் பலாத்காரம் செய்து கர்ப்பமாக்கி இருக்கிறார். இதை அறிந்த வங்காரம் கிராம மக்கள் அன்பழகனை கட்டி வைத்து அடித்து உதைத்துள்ளனர்.

அவர் அங்கிருந்து தப்பியோடி இருக்கிறார். நான்கு நாட்களுக்கு முன்பாக அந்த சிறுமியின் பெற்றோர் அரியலூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளனர். இந்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து தலைமறைவாக இருந்த அன்பழகனை தேடி வருகின்றனர். 

இத்தகைய நிலையில், கடலூர் மாவட்டம் விருத்தாச்சலம் அருகே பெண்ணாடம் பொன்னேரி பகுதிக்கு தப்பி வந்த அன்பழகன் அங்கே குளிர்பானத்தில் விஷத்தை கலந்து கொடுத்து தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து பொதுமக்கள் போலீஸ்க்கு தகவல் கொடுத்தனர். 

இந்த தகவலின் பேரில் விரைந்து வந்த போலீசார் அவரது உடலை மீட்டு விருத்தாச்சலம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் சுற்றுவட்டார பகுதிகளில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Ariyalur vangaram pocso criminal suicide in Pennadam


கருத்துக் கணிப்பு

SIR-யை திமுக கூட்டணி கட்சிகள் எதிர்ப்பது?



Advertisement

கருத்துக் கணிப்பு

SIR-யை திமுக கூட்டணி கட்சிகள் எதிர்ப்பது?




Seithipunal
--> -->