17 வயது சிறுமி பாலியல் பலாத்காரம்.. காமுகனாக கல்லூரி மாணவன்.. அரியலூரில் கொடூரம்..!! - Seithipunal
Seithipunal


பதினோராம் வகுப்பு பயின்று வரும் சிறுமி, கல்லூரி மாணவனால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அரியலூர் மாவட்டத்தில் உள்ள காத்தான்குடிகாடு கிராமத்தை சார்ந்த சிறுமி பெற்றோருடன் வசித்து வருகிறார். 

சிறுமியை அப்பகுதியை சார்ந்த கல்லூரி மாணவன் ஒருவன் பாலியல் பலாத்காரம் செய்துள்ளான். இதனால் சிறுமி கர்ப்பமான நிலையில், இந்த விஷயம் சிறுமியின் தந்தைக்கு தெரியவந்துள்ளது. மேலும், சிறுமி ஐந்து மாத கர்ப்பிணியாகியுள்ளார். 

சிறுமியின் கருவை கலைக்க முடிவு செய்த தந்தை, அங்குள்ள அரசு மருத்துவமனைக்கு சிறுமியை அழைத்து வந்துள்ளார். சிறுமியின் வயிற்றில் உள்ள கரு 5 மாதம் வளர்ச்சிபெற்றதால் மருத்துவர்கள் கருவை கலைக்க இயலாது என்று கூறியுள்ளனர். 

மேலும், இது குறித்த விசாரணையில் கல்லூரி மாணவனான பரமசிவம் கடந்த ஜனவரி மாதம் சிறுமியை மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்தது தெரியவந்துள்ளது. இதனையடுத்து சிறுமியின் தந்தை வழங்கிய புகாரின் அடிப்படையில், பரமசிவம் கைது செய்யப்பட்டுள்ளான். சிறுமியின் இரத்த மாதிரியை டி.என்.ஏ சோதனைக்கும் அனுப்பி வைத்துள்ளனர்.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Ariyalur 17 year girl sexual abuse police arrest college student


கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?




Seithipunal
--> -->