அரக்கோணம் | சிகரெட் வாங்க பணம் கொடுக்க மறுத்த தாயை ரத்த வெள்ளத்தில் மிதக்க விட்ட மகன்! - Seithipunal
Seithipunal


அரக்கோணம் அருகே சிகரெட் வாங்க பணம் கொடுக்க மறுத்த தாயை பெற்ற மகன் அடித்து கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது.

அரக்கோணம் அடுத்த குருவராஜபேட்டையை சேர்ந்தவர் ஆறுமுகம். இவரின் மனைவி அமிர்தம்மாள்.

ஆறுமுகம் சில ஆண்டுகளுக்கு முன்பு உயிரிழந்த நிலையில், மனநலம் பாதித்த மகன் ராஜாவுடன் அமிர்தம்மாள் வசித்து வந்துள்ளார்.

சம்பவம் நடந்த அன்று இரவு, ராஜா தனது தாயிடம் சிகரெட் வாங்க பணம் கேட்டுள்ளார். அப்போது தாய் அமிர்தம்மாள் சிகரெட் வாங்க பணம் மறுத்து மகனுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.

மேலும், சிகரெட் குடிப்பது உடல் நலத்திற்கு கேடு என்றும், சிகரெட் குடித்து உடம்பை ஏன் கெடுத்துக் கொள்கிறாய் என்று அறிவுரையும் கூறியுள்ளார்.

இதனை ஏற்க மறுத்த மகன் ராஜா, ஆத்திரத்தில் பெரிய பாத்திரம் ஒன்றை எடுத்து தாயின் தலையில் அடித்துள்ளார்.

இதில் சம்பவ இடத்திலேயே தாய் அமிர்தம்மாள் உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து அக்கம் பக்கத்தினர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கவே, தகவல் அறிந்து வந்த போலீசார் அமிர்தம்மாளின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் அமிர்தம்மாளை கொலை செய்த மகன் ராஜாவை கைது செய்த போலீசார். நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Arakonam son killed mother for cigarette


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->