பரதநாட்டியம் ஆடிய படி கிரிவலம் சுற்றிய ஆந்திர மாணவி.! - Seithipunal
Seithipunal


பரதநாட்டியம் ஆடிய படி கிரிவலம் சுற்றிய ஆந்திர மாணவி.!

திருவண்ணாமலையில் உள்ள அருணாசலேஸ்வரர் கோயிலுக்கு தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்துவிட்டு செல்கின்றனர். மேலும் பௌர்ணமி உள்ளிட்ட சிறப்பு நாட்களில் அங்குள்ள மலையைச் சுற்றி கிரிவலப் பாதையில் வலம் வந்து வழிபடுவதை பக்தர்கள் வழக்கமாக வைத்துள்ளனர். 

தற்போது பக்தர்கள் அனைத்து நாட்களிலும் கிரிவலம் செல்லத் தொடங்கியுள்ளனர். இந்த நிலையில், நேற்று காலை ஆந்திர மாநிலம் நெல்லூர் பகுதியை சேர்ந்த பவ்யஹாசினி என்ற மாணவி உலக நன்மைக்காக பரதநாட்டியம் ஆடியபடி கிரிவலம் செய்ய முடிவு செய்தார். 

அதன் படி அவர் அருணாசலேஸ்வரர் கோயிலில் உள்ள ராஜகோபுரம் முன்பு முதலில் வழிபாடு செய்து விட்டு பின்னர் நடனம் ஆடியபடியே தனது கிரிவலத்தை ஆரம்பித்தார். அப்போது அங்கு லேசான மழை பெய்யத் தொடங்கியது. 

இருப்பினும் அந்த மாணவி மழையையும் பொருட்படுத்தாமல் தனது நடனத்துடன் கூடிய கிரிவலத்தை தொடர்ந்தார். சுமார் 14 கிலோ மீட்டர் தொலைவு கொண்ட கிரிவலப்பாதையில் பரதநாட்டியம் ஆடியபடியே கிரிவலம் சுற்றி வந்துள்ளார்.

அதன் பின்னர் அவர் கோயில் முன்பாக வந்ததும் தனது கிரிவலத்தை நிறைவு செய்தார். அவரின் இந்த விடாமுயற்சியையும்  பக்தியையும் கண்டு பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் அவருக்கு வாழ்த்து தெரிவித்தனர். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

andhira student girivalam with barathanatiyam dance in tiruvannamalai


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->