வேளாண் கல்லூரி மாணவி திடீர் தற்கொலை.! தீவிர விசாரணையில் போலீசார்..!
Agricultural college girl committed suicide in Tiruvannamalai
திருவண்ணாமலை மாவட்டத்தில் வேளாண் கல்லூரி மாணவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் பகுதியை சேர்ந்தவர் கருணாநிதி. இவரது மகள் காயத்ரி(21). இவர் திருவண்ணாமலை மாவட்டம் வாழவச்சனூரில் உள்ள அரசு வேளாண்மை மற்றும் ஆராய்ச்சி கல்லூரியில் 3-ம் ஆண்டு படித்து வந்தார். இந்நிலையில் காயத்ரி நேற்று அதே பகுதியில் உள்ள கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டுள்ளார். இதையடுத்து இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து வந்த வாணாபுரம் போலீசார், காயத்ரியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்நிலையில் மாணவியின் உடலில் காயங்கள் இருப்பதால், மாணவியின் சாவில் சந்தேகம் இருப்பதாக கூறி மாணவியின் உறவினர்கள் மருத்துவமனையை முற்றுகையிட்டனர். இதைத்தொடர்ந்து போலீசார் அவர்களிடம் பேச்சு வார்த்தை மேற்கொண்டனர். இதையடுத்து இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் மாணவி தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது வேறு ஏதேனும் காரணங்கள் உண்டா? என்று பல்வேறு கோணங்களில் தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
English Summary
Agricultural college girl committed suicide in Tiruvannamalai