சேலத்து சிங்கம் எடப்பாடி எதற்கும் அஞ்சுவதில்லை - பரபரப்பைக் கிளப்பிய போஸ்டர்.! - Seithipunal
Seithipunal


ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள பசும்பொன்னில் ஒவ்வொரு வருடமும் அக்டோபர் மாதம் 29, 30,31 உள்ளிட்ட மூன்று தேதிகளில் பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர் குருபூஜை, தேவர் ஜெயந்தி விழா உள்ளிட்டவை நடைபெறும். இந்த விழாவிற்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள், சமுதாய அமைப்புகளை சேர்ந்தோர் வருவார்கள். 

அந்த வகையில், இந்தாண்டு தேவர் ஜெயந்திக்கு எடப்பாடி பழனிசாமி வருவதற்கு அச்சமுதாய மக்கள் சிலர் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் சிவகங்கை மாவட்ட அதிமுகவினர் அதற்கு கண்டனம் தெரிவிக்கும் விதமாக போஸ்டர்கள் அச்சடித்து மாவட்டம் முழுவதும் ஒட்டியுள்ளனர். 

அதில், திருபுவனம் பகுதி அதிமுகவினர் "வருங்கால பிரதமர் எடப்படி பழனிசாமி" என்று போஸ்டர் அடித்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளனர். அதேபோல், காளையார்கோயிலில் அதிமுக மாவட்ட எம்ஜிஆர் இளைஞரணி துணை செயலாளர் மணிமாறன் என்பவர் ஒட்டியுள்ள போஸ்டரில் "குள்ள நரி கூட்டம்", "லெட்டர் பேடு அமைப்புகள்" என்று குறிப்பட்டுள்ளார். 

மேலும், "சேலத்து சிங்கம் எடப்பாடி எதற்கும் அஞ்சுவதில்லை" என்றும் போஸ்டரில் குறிப்பிடப்பட்டுள்ளது. முக்குலத்தோரில் ஒரு பிரிவைச் சேர்ந்த மணிமாறன் ஒட்டியுள்ள போஸ்டரால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு கிளம்பியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

admk poster viral in sivakangai


கருத்துக் கணிப்பு

ஐபில் போட்டியில் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருப்பதற்கு காரணம்



Advertisement

கருத்துக் கணிப்பு

ஐபில் போட்டியில் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருப்பதற்கு காரணம்




Seithipunal
--> -->