VIDEO: நூலிழையில் உயிர் தப்பிய எடப்பாடி பழனிச்சாமி! செங்கத்தில் பெரும் பரபரப்பு! தொண்டர்கள் அதிர்ச்சி!
ADMK EPS Election campaign accident
மக்களைக் காப்போம், தமிழகத்தை மீட்போம் என்ற தலைப்பில் அவர் மாநிலம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். அதன் தொடர்ச்சியாக திருவண்ணாமலை மாவட்டத்தில் நேற்று முதல் பிரசாரம் செய்து வந்தார்.
அவரை வரவேற்க சாலைகளின் பக்கங்களில் மற்றும் மேல் பகுதிகளில் அலங்கார வளைவுகள், பேனர்கள் உள்ளிட்ட பிரம்மாண்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.
இந்த நிலையில், செங்கத்தில் எடப்பாடி பழனிசாமியின் பிரசார ஊர்தி வந்துகொண்டிருக்கும்போது, சாலையின் குறுக்கே உயரத்தில் வைக்கப்பட்டிருந்த அலங்கார வளைவு திடீரென சரிந்து விழுந்தது. அவர் பயணித்த வாகனம் சில வினாடிகள் முன்னதாகவே அந்த இடத்தை கடந்ததால், பெரும் விபத்து அப்போது தவிர்க்கப்பட்டது.
வளைவு கீழே சரிந்ததும் அங்கு இருந்த கூட்டத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. காவல்துறையினர் உடனடியாக நடவடிக்கை எடுத்து, வளைவை அப்புறப்படுத்தினர். அதிர்ஷ்டவசமாக யாருக்கும் காயம் ஏற்படவில்லை.
இந்நிலையில், எடப்பாடி பழனிசாமி தனது பிரசாரத்தை தொடர்ந்து மேற்கொண்டார். இந்த சம்பவம் குறித்து அறிந்த அதிமுகவினர் அதிர்ச்சியும், அதேசமயம் அவர் பாதுகாப்பாக தப்பியதில் நிம்மதியும் தெரிவித்துள்ளனர்.
English Summary
ADMK EPS Election campaign accident