வெட்டி படுகொலை செய்யப்பட்ட அதிமுக புள்ளி! வேதனையில் எடப்பாடி பழனிசாமி! - Seithipunal
Seithipunal


சிவகங்கை மாவட்டம், அதிமுக கிளைச் செயலாளர் கண்ணன் வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு, எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே பழனிச்சாமி விடுத்துள்ள செய்திக்குறிப்பில், "சிவகங்கை மாவட்டம், சிவகங்கை வடக்கு ஒன்றியம், கட்டாணிபட்டி ஊராட்சி, பொன்குண்டுபட்டி கிளைக் கழகச் செயலாளர் திரு. P. கண்ணன் அவர்கள் மர்ம நபர்களால் படுகொலை செய்யப்பட்டுள்ளார் என்ற செய்தி கேட்டு மிகுந்த வருத்தமுற்றேன்.

இந்தப் படுகொலையைச் செய்தவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் சட்டத்தின் முன்பு நிறுத்தப்பட்டு தக்க தண்டனை வழங்கப்பட வேண்டும்.

கழகத்தின் மீதும், கழகத் தலைமையின் மீதும் விசுவாசம் கொண்டு பணியாற்றி வந்த அன்புச் சகோதரர் திரு. கண்ணன் அவர்களை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்வதுடன், அன்னாரது ஆன்மா இறைவன் திருவடி நிழலில் அமைதிபெற எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறேன்" என்று, எடப்பாடி கே. பழனிசாமி தெரிவித்துள்ளார். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

ADMK EPS condemn for Kannan murder


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->