விடியா திமுக ஆட்சியில் தமிழ்நாட்டில் யாருக்கும் பாதுகாப்பு இல்லை - 24 மணிநேரத்தில் 4 சம்பவங்கள் - கொந்தளிக்கும் எடப்பாடி பழனிச்சாமி!
ADMK Edappadi Palanisamy Condemn to DMK Govt july 2024
கடந்த 24 மணிநேர செய்திகளை சுட்டிக்காட்டி, விடியா திமுக ஆட்சியில் தமிழ்நாட்டில் யாருக்கும் பாதுகாப்பு இல்லை என்று சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவரும், அதிமுக பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்த அவரின் அந்த செய்திக்குறிப்பில்,
"கடந்த 24 மணிநேரத்திற்குள் வந்த செய்திகள்:
●செங்கல்பட்டில் பள்ளி மாணவர்கள் கடத்தல்.
●புதுக்கோட்டையில் மர்மநபர்களால் இளைஞர் வெட்டிப் படுகொலை.
●தஞ்சாவூர் மங்களபுரம் பகுதியில் 21 வயது இளைஞர் வெட்டிப்படுகொலை.
●தேனியில் குண்டர் சட்டத்தில் சிறைசென்று வந்தவரை கொடிய ஆயுதங்களுடன் ஒரு கும்பல் கொல்ல முயற்சி.

இனி இந்த விடியா திமுக அரசின் முதல்வரிடம் சட்டம் ஒழுங்கைப் பாதுகாக்க வலியுறுத்தி எந்த பயனும் இல்லை.
எனவே, மக்கள் பணியில் தான் நீங்களும் உள்ளீர்கள் என்ற அர்ப்பணிப்போடு தமிழ்நாட்டின் சட்டம் ஒழுங்கைக் காக்க காவல்துறை அதிகாரிகளைக் கேட்டுக்கொள்கிறேன்.

விடியா திமுக ஆட்சியில் தமிழ்நாட்டில் யாருக்கும் பாதுகாப்பு இல்லை என்று உறுதியாகிவிட்டது. மக்களே, நமக்கு நாமே பாதுகாப்பு" என்று எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.
குறிப்பு : செங்கல்பட்டு அருகே பள்ளிக்கு சென்ற மாணவர்கள் கடத்தப்பட்டதாக சொல்லப்படும் செய்தியில், காவேரிபாக்கம் அருகே அந்த மாணவர்கள் மீட்கப்பட்டுள்ளார்.
கருத்து வேறுபாடு காரணமாக தந்தை வேலன் அரவணைப்பில் மாணவர்கள் இருந்துவந்த நிலையில், தாய் ஆர்த்தி மற்றொரு நபருடன் சேர்ந்து குழந்தைகளை அழைத்துச் சென்றதாக தகவல் வெளியாகியுள்ளது.
English Summary
ADMK Edappadi Palanisamy Condemn to DMK Govt july 2024