திருப்பத்தூரில் பரபரப்பு...! ரூ. 5 ஆயிரம் லஞ்சம் வாங்கிய காவல் அதிகாரியை காது செய்த லஞ்ச ஒழிப்புத்துறை...! - Seithipunal
Seithipunal


திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அருகே, விபத்தில் சிக்கிய வாகனத்தை விடுவிக்க ரூ.5 ஆயிரம் லஞ்சம் பெற்றதாக ஆலங்காயம் காவல் நிலைய சிறப்பு உதவி காவல் ஆய்வாளர் கைது செய்யப்பட்டுள்ளார்.ஆலங்காயம் காவல் நிலையத்தில் சிறப்பு உதவி காவல் ஆய்வாளராக பணியாற்றி வருபவர் ராமகிருஷ்ணன்.

விபத்தில் சிக்கிய வாகனத்தை விடுவிப்பதற்காக, அதன் உரிமையாளரிடம் அவர் ரூ.5 ஆயிரம் லஞ்சம் கேட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இதையடுத்து, லஞ்சப் பணத்தை வழங்குவது குறித்து சம்பந்தப்பட்ட நபர் லஞ்ச ஒழிப்புத் துறையினரிடம் புகார் அளித்ததாக தெரிகிறது. புகாரின் அடிப்படையில் நடவடிக்கை மேற்கொண்ட லஞ்ச ஒழிப்புக் காவலர்கள், இன்று ராமகிருஷ்ணன் லஞ்சப் பணத்தைப் பெறும் போது அவரைக் கையும் களவுமாக பிடித்தனர்.

இதைத் தொடர்ந்து, அவரிடமிருந்த லஞ்சப் பணத்தை பறிமுதல் செய்த லஞ்ச ஒழிப்புக் காவலர்கள், சிறப்பு உதவி காவல் ஆய்வாளர் ராமகிருஷ்ணனை கைது செய்தனர். பின்னர் அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

There stir Tirupattur Anti Corruption Department arrested police officer who took bribe 5 thousand


கருத்துக் கணிப்பு

டாஸ்மாக் நிர்வாகத்தை முறைப்படுத்தும் தமிழக அரசின் nadavadikkaikal ...



Advertisement

கருத்துக் கணிப்பு

டாஸ்மாக் நிர்வாகத்தை முறைப்படுத்தும் தமிழக அரசின் nadavadikkaikal ...




சினிமா

Seithipunal
--> -->