எனக்கு வருத்தம் பா! பட்டுனு சொன்ன குஷ்பு!
Actress Gautami BJP Kushboo
தனது நிலம் அபகரிக்கப்பட்டதால் பாஜகவிலிருந்து விலகுவதாக நடிகை கவுதமி விலகினார். கனத்த இதயத்துடன் பக்கவிலிருந்து விலகுவதாக அவர் அறிவித்து இருந்தார்.
பாஜகவிலிருந்து நடிகை கவுதமி விலகினாலும், அவருக்கு துணை நிற்போம் என்று பாஜக மாநில தலைவர் அண்ணாமலையும் உறுதியளிக்க, எதிர்க்கட்சிகள் இந்த விவகாரம் குறித்த கடுமையாக விமர்சிக்க தொடங்கியுள்ளனர்.
இந்த நிலையில், நடிகை கவுதமி விலகல் குறித்து பாஜக தேசிய செயற்குழு உறுப்பினர் நடிகை குஷ்பு தனது கருத்தினை தெரிவித்துள்ளார்.
இதுகுறித்த அவரின் செய்திக்குறிப்பில், "எனது சக உறுப்பினரான கவுதமி பாஜகவிலிருந்து வெளியேறியது வருத்தமாக உள்ளது. அவர் நல்ல பண்பாளர். சுயநலமில்லாத கடின உழைப்பாளியாக கட்சிக்காக பணியாற்றினார். அவரது எதிர்கால திட்டங்களுக்கு எனது வாழ்த்துகள்" என்று நடிகை குஷ்பு தனது கருத்தினை தெரிவித்துள்ளார்..
English Summary
Actress Gautami BJP Kushboo