இறந்த பிறகும் நீ புகழப்படுகிறாய் - கவிஞர் வைரமுத்து ட்வீட்.!! - Seithipunal
Seithipunal


இன்று தமிழகத்தின் முன்னாள் முதல்வரும், திமுகவின் மூத்த தலைவருமான கருணாநிதியின் நினைவுநாள் அனுசரிக்கப்படுகிறது. இதனை முன்னிட்டு பல்வேறு தரப்பினர் கலைஞர் கருணாநிதிக்கு புகழஞ்சலி செலுத்தி வருகிறார்கள். இந்த நிலையில், கவிஞர் வைரமுத்து கலைஞர் நினைவு நாளை முன்னிட்டு தனது எக்ஸ் தள பக்கத்தில் கவிதை வடிவில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் தெரிவித்து இருப்பதாவது:-

"புகழப்படுவதற்கோ

இகழப்படுவதற்கோ

உயிர்ப்போடு திகழவேண்டும்

ஒரு பொருள்

இறந்த பிறகும்

நீ புகழப்படுகிறாய்

மற்றும்

இகழப்படுகிறாய்

என்ன பொருள்?

உன்னதப் பொருளாக

இன்னும் நீ

உயிர்ப்போடு திகழ்கிறாய்

என்று பொருள்

இரு இப்படியே

இறந்த பிறகும்

உனக்கு

இறப்பில்லை உயிர்ப்பே!" என்றுத் தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

poet vairamuthu tweet about kalaingar karunanithi memorable day


கருத்துக் கணிப்பு

தவெக தலைமையில் மூன்றாவது கூட்டணி அமையுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தவெக தலைமையில் மூன்றாவது கூட்டணி அமையுமா?




Seithipunal
--> -->