வெளியுறவுத்துறை அமைச்சருக்கு கடிதம் எழுதிய முதலமைச்சர்...! கைது செய்யப்பட்ட மீனவர்களை விடுவிக்க வேண்டுகோள்!!!
Chief Minister writes to Foreign Minister Requesting release arrested fishermen
தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள், மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு மீனவர்கள் குறித்து கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.

அந்தக் கடிதத்தில் அவர் குறிப்பிட்டதாவது,"மத்திய வெளியுறவுத் துறை அமைச்சரின் தனி கவனத்திற்கு, இலங்கைக் கடற்படையினரால் நேற்று அதிகாலை 14 இந்திய மீனவர்கள், அவர்களது இயந்திரமயமாக்கப்பட்ட மீன்பிடிப் படகு மற்றும் ஒரு பதிவு செய்யப்படாத நாட்டுப்படகுடன் சிறை பிடிக்கப்பட்டதை கொண்டு வருகிறேன்.
இலங்கைக் கடற்படையினரால் தமிழ்நாட்டு மீனவர்கள் தொடர்ந்து கைது செய்யப்படுவதை முடிவுக்குக் கொண்டுவர மத்திய அரசு தூதரக ரீதியாக தலையிட வேண்டும் என்று தான் பலமுறை வேண்டுகோள் விடுத்த போதிலும், இதுபோன்ற கைது சம்பவங்கள் தொடர்வது மிகவும் கவலையளிக்கிறது.
இந்த 2025 ஆம் ஆண்டில் மட்டும் நடைபெற்ற கைது சம்பவங்களில், இது 17-வது சம்பவம்.இது தற்போது, 237 மீன்பிடிப் படகுகளும், 80 மீனவர்களும் இலங்கை அதிகாரிகளின் காவலில் இருப்பதால் மீனவர்களின் ஒரே வாழ்வாதாரமான பாரம்பரிய நீர்நிலைகளில் மீன்பிடிக்கும் உரிமையை இழந்துள்ளனர் என்பதை வேதனையுடன் தெரிவித்துக்கொள்கிறேன்.
ஆகையால், கைது செய்யப்பட்ட அனைத்து தமிழக மீனவர்களையும், அவர்களது மீன்பிடிப் படகுகளையும் விரைவில் விடுவிப்பதற்குத் தேவையான உடனடி நடவடிக்கைகளை எடுத்திடுமாறு மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கரை வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறேன் " என்று தெரிவித்துள்ளார்.
இது போன்று முதலமைச்சர் அவ்வப்போது வேண்டுகோள் விடுத்தும் இதுவரை நடவடிக்கை எடுக்க வில்லை.இம்முறையாவது இந்த கடிதத்திற்கு பதில்கிடைக்குமென்று எதிர்பார்க்கின்றனர்.
English Summary
Chief Minister writes to Foreign Minister Requesting release arrested fishermen