கடிதம் எழுதி வைத்துவிட்டு தன் முடிவை தேடிக்கொண்ட மருத்துவக் கல்லூரி மாணவி...!
medical college student who wrote a letter and sought her fate
ராஜஸ்தானை சேர்ந்த 21 வயது இளம்பெண், மராட்டிய மாநில புனேவிலுள்ள பி.ஜே. அரசு மருத்துவ கல்லூரியில் படித்து வந்தார்.அங்கு 2-ம் ஆண்டு எம்.பி.பி.எஸ். படித்த இவர் கல்லூரி விடுதியிலுள்ள அறை ஒன்றில் சக மாணவிகள் 2 பேருடன் தங்கியிருந்தார்.இந்நிலையில்,நேற்று முன்தினம் மாலை வெகுநேரம் ஆகியும் மாணவி விடுதியறைக்கு திரும்பவில்லை.

இதன் காரணமாக மாணவியுடன் தங்கியிருந்த தோழிகள் அவரை செல்போனில் தொடர்புகொண்டனர். ஆனால் மாணவி போனை எடுக்கவில்லை.இதனால் சந்தேகமடைந்த தோழிகள், மாணவி காணாமல் போனதாக புகாரளிக்க காவலரை அணுகினர்.இதனிடையே, அந்த விடுதியிலுள்ள மற்றொரு அறையில் காணாமல் போன மாணவி தூக்கில் பிணமாக தொங்கிக்கொண்டு இருந்துள்ளார்.
இதை அந்த அறையில் தங்கியிருந்த மற்றொரு மாணவி கண்டு அதிர்ச்சியில் கூச்சலிட்டார். உடனடியாக அங்கு வந்த விடுதி அதிகாரிகள் காவலர்களுக்கு தகவல் தெரிவித்தனர்.அங்கு சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவலர்கள் மாணவியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அருகில் உள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் மாணவியின் அறையில் காவலர்கள் நடத்திய சோதனையில் தற்கொலை செய்துகொள்வதற்கு முன்பு மாணவி எழுதி வைத்திருந்த கடிதம் ஒன்றை கைப்பற்றினர்.
அந்த கடிதத்தில் மாணவி குறிப்பிட்டதாவது," தான் மனநல சிகிச்சை பெற்றுவருவதாகவும், மேலும் படிக்க விரும்புவதாகவும் குறிப்பிட்டிருந்தார். மேலும், கடிதத்தில் உள்ள மற்ற விவரங்களை பற்றி காவலர்கள் வெளியிட மறுத்து விட்டனர். இந்த சம்பவம் குறித்து காவலர்கள் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மன அழுத்தம் ஏற்பட்டாலோ, தற்கொலை எண்ணம் வந்தாலோ, அதில் இருந்து விடுபடுவதற்கு தமிழக சுகாதார சேவை உதவி மையம் - 104, சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் - 044-24640050 ஆகிய எண்களை அழைக்கலாம்.
English Summary
medical college student who wrote a letter and sought her fate