கரூர் : சாலை விபத்தில் வியாபாரி பலி...! - Seithipunal
Seithipunal


கரூர் மாவட்டம், குளித்தலை காவேரி நகர் பகுதியை சேர்ந்தவர் மாதவன். இவர் மதுரையில் சொந்தமாக வாகனங்களின் டயர் வாங்கி விற்கும் கடையை நடத்தி வருகிறார். இவருக்கு திருமணமாகி இரு குழந்தைகள் உள்ளனர்.

இவர் நேற்று மதுரையில் இருந்து தனது சொந்த ஊருக்கு தனது காரில் வந்துள்ளார். அப்போது மணப்பாறை-குளித்தலை நெடுஞ்சாலையில் கார் சென்றுகொன்டிருந்தது. அங்குள்ள தேசியமங்கலம் அருகே வந்து கொண்டிருக்கும் போது கட்டுப்பாட்டை இழந்த கார் அங்குள்ள சென்டர் மீடியன் மீது வேகமாக மோதியது. இந்த விபத்தினால் மாதவன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் மாதவனின் உடலை பிரேத பரிசோதனைக்காக குளித்தலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்து குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Accident Near kulithalai


கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?


செய்திகள்



Seithipunal
--> -->