இருசக்கர வாகனம் மீது மோதிய அரசு விரைவு பேருந்து.. ஒருவர் பரிதாப பலி.. இருவர் படுகாயம்..! - Seithipunal
Seithipunal


இருசக்கர வாகனம் மீது அரசு விரைவு பேருந்து மோதிய விபத்தில் இளைஞர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

திருச்சி மாவட்டம், நெய்குப்பை பகுதியை சேர்ந்தவர் கரண். இவர் தனது நண்பர்களான வெற்றிவேல் மற்றும் முரளி உடன் இருசக்கர வாகனத்தில் சமயபுரம் கூத்தூர் பிரிவு சாலையை கடக்க முயன்றார்.

அப்போது எதிர்பாராதவிதமாக திருச்சியிலிருந்து சென்னை நோக்கி கொண்டிருந்த அரசு விரைவு பேருந்து அவர்கள் மீது மோதியது‌. இந்த விபத்தில் வெற்றிவேல் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார் மேலும் ஆகிய இருவரும் படுகாயம் அடைந்தனர்.

விபத்து குறித்து தகவல் அறிந்து வந்த காவல்துறையினர் காயமடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர் அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த விபத்து குறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Accident In Trichy By pass Rode


கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?




Seithipunal
--> -->