குறைந்த விலைக்கு தங்கம் வாங்கி கொடுப்பதாக பலரை ஏமாற்றியதாக குற்றசாட்டு; 'கோல்டு மேன்' சூரியபாபு மீது தெலங்கானா போலீஸ் வழக்கு..!
Gold Man Suriyababu accused of cheating many people by buying and selling gold at low prices
ஹைதராபாத் பாத்தபஸ்தி பகுதியை சேர்ந்தவர் சூரியகுமார். இவர் கிலோ கணக்கில் தங்க ஆபரணங்களை அணிந்து உலா வந்து அனைவரையும் கவனத்தை ஈர்த்தவர்.
இதனால் இவரை 'கோல்டு மேன்' மற்றும் 'சூரிய பாபு' என்றும் மக்கள் அழைகின்றனர். இந்நிலையில், இவர் குறைந்த விலைக்கே தங்கம் வாங்கி கொடுப்பதாக பலரிடம் பணம் வாங்கி ஏமாற்றி விட்டதாக சிலர் ஹைதராபாத் நாராயண கூடா போலீஸ் நிலையத்தில் நேற்று புகார் அளித்துள்ளனர்.
அந்த புகார் மனுவில், தங்கம் வாங்கி கொடுக்காத காரணத்தினால் பணத்தை திருப்பி தர வேண்டும் என கேட்டதற்கு சில நாட்களுக்கு முன் ரூ.20 லட்சத்துக்கு காசோலையும், 03 ஐபோன்களும் கொடுத்தார். அந்த காசோலையில் பணம் இல்லை என்று குறிப்பிட்டுள்ளனர்.
அத்துடன், செல்போன்களை மீண்டும் தானே வீட்டுக்கு வந்து பிடுங்கி சென்று விட்டதாகவும் பாதிக்கப்பட்டவர்கள் கூறுயுள்ளனர். இதன் காரணமாக 'கோல்டு மேன்' சூரிய பாபு மீது நாராயண கூடா போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தவுள்ளனர்.
English Summary
Gold Man Suriyababu accused of cheating many people by buying and selling gold at low prices