போதை மறுவாழ்வு மையம்... கத்தியால் குத்தி தற்கொலைக்கு முயன்ற ஏ.சி. மெக்கானிக்..! போலீஸ் விசாரணை - Seithipunal
Seithipunal


போதை மறுவாழ்வு மையத்தில் ஏ.சி மெக்கானிக் கத்தியால் குத்தி தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

திருவள்ளூர் மாவட்டம் ஆவடி அடுத்து சேக்காடு பகுதியில் உள்ள போதை மறுவாழ்வு மையத்தில் தங்கி சிகிச்சை பெற்று வருபவர் ஏசி மெக்கானிக் அசோக்குமார் (42). இவர் நேற்று முன்தின இரவு போதை மறுவாழ்வு ஊழியர்களிடம், வீட்டிற்கு செல்ல வேண்டும் என்று கூறியுள்ளார். ஆனால் ஊழியர்கள் இதற்கு மறுப்பு தெரிவித்ததால், அசோக் குமார் சமையலறைக்குச் சென்று அங்கிருந்து கத்தியை எடுத்து தனக்குத்தானே வயிற்றில் குத்தி தற்கொலைக்கு முயன்றுள்ளார்.

இதையடுத்து அசோக் குமாரை மீட்டு சிகிச்சைக்காக அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். பின்பு அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் அசோக் குமார் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் அசோக்குமார் தனக்குத்தானே வயிற்றில் கத்தியால் குத்திக்கொள்ளும் காட்சிகள், தற்போது சமூக வலைதலைகளில் வைரலாக பரவி வருகிறது.

இதைத்தொடர்ந்து இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார், இது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

AC mechanic tried to commit suicide by stabbing himself in a drug rehabilitation center in tiruvallur


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->