சூதாட்டத்தில்பணத்தை இழந்த வாலிபர் ரெயில் முன் பாய்ந்து தற்கொலை!
A young man who lost money in gambling jumped in front of a train and committed suicide
சூதாட்டத்தில் ரூ.15 லட்சம் இழந்த வாலிபர் ரெயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார்.
சமீபகாலமாக தமிழகத்தில் ஆன்லைன் சூதாட்டத்தில் ஏற்படும் பண இழப்புகளால் தற்கொலை செய்து கொள்ளும் சம்பவம் அதிகரித்துவருகிறது.ஆன்லைன் சூதாட்டம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினாலும் தற்கொலை சம்பவங்கள் அடிக்கடி நடந்து வருகிறது.நேற்று தென்காசியில் ஆன்லைன் சூதாட்டத்தில் பணத்தை இழந்த பெண் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
.
இந்தநிலையில் மேலும் ஒரு அதிர்ச்சி சம்பவம் மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே நடந்துள்ளது.ஆன்லைன் சூதாட்டத்தில் ரூ.15 லட்சம் இழந்த வாலிபர் ரெயில் முன் பாய்ந்து தற்கொலை செய்துகொண்டார்.
35 வயதான சில்லாம்பட்டியை சேர்ந்த சின்னராஜா டிரைவிங் பயிற்சி நிறுவனத்தில் டிரைவிங் பயிற்சியாளராக பணியாற்றி வந்தார். இவருக்கு ரூபாபதி என்ற மனைவியும், 7 வயதில் மகனும், 5 வயதில் மகளும் உள்ளனர்.
இந்தநிலையில் சின்னராஜா, கடந்த சில மாதங்களாக ஆன்லைன் சூதாட்டம் மூலம் தோல்வி அடைந்து ரூ.15 லட்சத்துக்கும் மேலாக கடனாளியாக மாறியதால் கடன் கொடுத்தவர்கள் பணத்தை திருப்பி கேட்டு வந்ததாக கூறப்படுகிறது.
இதனால் 2 தினங்களுக்கு முன் மன உளைச்சலில் வீட்டை விட்டு வெளியே சென்ற சின்னராஜா ரெயில் முன்பு பாய்ந்து தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
English Summary
A young man who lost money in gambling jumped in front of a train and committed suicide