திண்டுக்கல்லில் பயங்கரம்: தலையில் கல்லை போட்டு தொழிலாளி கொடூரமாக கொலை.! - Seithipunal
Seithipunal


திண்டுக்கல் மாவட்டத்தில் தொழிலாளி தலையில் கல்லை போட்டு கொடூரமாக கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திண்டுக்கல் மாவட்டம் சிறுமலை பகுதியை சேர்ந்தவர் கூலித்தொழிலாளி வீரன்(45). இவரது மனைவி தனம். இவர்களுக்கு மூன்று மகன்களும், இரண்டு மகள்களும் உள்ளனர். இந்நிலையில் வீரன் பாரதிபுரம் சந்தைப்பேட்டை பகுதியில் வசித்து வரும் தந்தையை பார்ப்பதற்காக நேற்று மாலை சென்றுள்ளார். அப்பொழுது சுகாதார வளாகம் அருகே வீரனை வழி மறித்த இரண்டு மர்ம நபர்கள் அவரிடம் தகராறில் ஈடுபட்டுள்ளனர்.

இதில் இவர்களிடையே தகராறு முற்றிய நிலையில் ஆத்திரமடைந்த அவர்கள் இரண்டு பேரும், வீரனின் கழுத்தை கயிற்றால் இறுக்கி அருகில் கிடந்த பாறாங்கல்லை எடுத்து அவர் தலையில் போட்டுவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர். இதில் முகம் சிதைந்து வீரன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இதையடுத்து இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து வந்த போலீசார், வீரனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

இதைத்தொடர்ந்து சம்பவ இடத்தில் போலீசார் சோதனை மேற்கொண்டதில் செல்போன் ஒன்றை கைப்பற்றினர். மேலும் இந்த கொலை சம்பவத்தில் தொடர்புடைய இரண்டு பேரைப் பிடித்த போலீசார், கொலைக்கான காரணம் குறித்து தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

A worker murder with a stone on his head in Dindigul


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->